நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படம் வரும் ஆகஸ்ட் 11ஆம்
வெளிவர உள்ளது. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகிறது.
ஆனால் அந்த உற்சாகத்தை அப்படியே சோகமாக மாற்ற வைத்தது சன்பிக்சர்ஸ். ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகிறது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது.
இதனால் அதிர்ந்து போன சிவகார்த்திகேயனின் மாவீரன் படக்குழு, தேவையில்லாமல் வம்பு வேண்டாம் என ஒதுங்கி கொண்டது. ரஜினியுடன் மோதவேண்டாம் என நினைந்து தன்னுடைய மாவீரன் படத்திற்கு ஜூலை 14ஆம் தேதி வெளியிட முடிவு செய்துவிட்டார் சிவா.
எதற்காக சிவகார்த்திகேயனின் படத்துடன் ரஜினி படத்தை மோதவைக்க சன் பிக்சர்ஸ் திட்டமிட்டது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்துள்ளார். அப்படத்தை முத்தையா இயக்க போகிறார் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிவாவிடம் கூறியுள்ளனர்.
ஆனாலும் படத்தின் கதை கேட்காமல் நிராகரித்துக்கொண்டே இருந்துள்ளார். இதனால் இறுதியில் அப்படம் கைவிடப்பட்டுவிட்டது என கூறப்படுகிறது.
இந்த விஷயத்தினால் சிவகார்த்திகேயனை பழிவாங்க சன் பிக்சர்ஸ் இப்படி செய்துள்ளது என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இருந்தாலும் சிவகார்த்திகேயன் மீது இவ்வளவு வன்மம் ஆகாது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.