அகல கால் வச்சி அழிந்த சிவகார்த்திகேயன்… இது உனக்கு தேவையாப்பா? வெளுத்து வாங்கிய சவுக்கு ஷங்கர்!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பெரிய விஷயம் என்று தான் சொல்ல வேண்டும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் உச்ச நடிகராக வளர்ந்து நிற்கிறார். எந்த ஒரு பின்புலனும் இல்லாமல், டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தபடாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, டாக்டர் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிப்பையும் தாண்டி தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதிலும் வெற்றி பயணத்தை துவக்கியுள்ளார். மேலும் பாடலாசிரியாகராகவும் வலம் வருகிறார். இப்படி தன் திறமையை வெளிப்படுத்தி பன்முக திறமை மூலம் வெற்றி கொடி நாட்டி வருகிறார். ஆனால் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தொடர்ந்து nepotism’மால் தடுத்து நிறுத்தப்படுகிறது.

ஆம், இவரது வளர்ச்சியை பார்த்து பிரபல அரசியல் குடும்பத்தில் இருந்து நடிக்க வந்த இளம் நடிகர் பொறாமைப்பட்டு சிவகார்த்திகேயன் career-ஐ செய்ய திட்டமிட்டு அடுத்தடுத்து 4 படங்களை அவரது தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க அக்ரீமண்ட் போட்டாராம். ஆனால், அவர்கள் படமெடுக்காமல் மற்ற எந்த இயக்குனரின் படங்களிலும் நடிக்க விடாமல் தடுக்க திட்டமிட்டு தான் இப்படி செய்தார்களாம். சிவகார்த்திகேயனுக்கு இந்த விஷயம் பின்னர் தான் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் எப்படியோ அவர்கள் பிடியில் இருந்து தப்பித்து வந்தார் என பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறினார்.

மேலும் சிவகார்த்திகேயனும் இதனை பேட்டி ஒன்றில் கூறி கலங்கி அழுதார். இந்நிலையில் சினிமாவில் சிவகார்த்திகேயன் ஒடுக்கப்படுவது குறித்து பேசிய சவுக்கு சங்கர், இன்று அஜித் விஜய்யை காட்டிலும் சிவகார்த்திகேயன் தான் பெரிய நடிகர் என கூறியுள்ளார். காரணம் அஜித் – விஜய் படங்கள் வருடத்திற்கு இரண்டு தான் வரும் அதில் ஒன்று நிச்சயம் தோல்வி அடைகிறது. ஆனால், சிவகார்த்திகேயன் ஒரே ஆண்டில் நான்கு படங்களில் நடிக்கிறார். அதில் இரண்டு படங்கள் வெற்றி அடைகிறது அப்போ யார் பெரிய ஹீரோ? சிவகார்த்திகேயன் தானே? ஆனால், ஏன் அவர் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கெல்லாம் காரணம் சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும், அதை விட்டுவிட்டு படம் தயாரிக்கிறேன். வேறு தொழில் செய்கிறேன். தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிக்கிறேன் என முதலீடு செய்து மேலும் மேலும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு அகல கால் வைத்ததால் தான் அவர் பெரிய அடி வாங்கினார். அதன்பின்னர் டாக்டர் படத்தின் வெற்றிதான் அவரை தூக்கிவிட்டது. எனவே இனி அது போல் முடிவுகளில் இறங்கக்காமல் இருப்பது தான் அவருக்கு நல்லது என சவுக்கு சங்கர் அட்வைஸ் கூறியுள்ளார்.

Ramya Shree

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

9 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

10 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

10 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

11 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

11 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

12 hours ago

This website uses cookies.