சினிமா / TV

பொது வெளியில் அசிங்கப்படுத்திய டான்ஸ் மாஸ்டர்!  கதறி அழுத சிவகார்த்திகேயன் பட நடிகை?

பாலிவுட் பைங்கிளி

பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் இஷா கோபிகர். இவர் தமிழில் “காதல் கவிதை”, “என் சுவாசக் காற்றே” போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் சிவகார்த்திகேயனின் “அயலான்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இவர் சினிமாவிற்குள் நுழைந்ததே “W/O V. Vara Prasad” என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்தின் மூலம்தான். இத்திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இஷா கோபிகர் அப்பாடலுக்கு நடனம் அமைத்த டான்ஸ் மாஸ்டர் தன்னை அவமானப்படுத்தியதாக ஒரு அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

நீங்கள் எல்லாம் ஏன் டான்ஸ் ஆட வர்ரீங்க?

“தென்னிந்திய சினிமா படப்பிடிப்பில் நடந்த சம்பவம் இது. அது எனது கெரியரின் தொடக்கம். பாலிவுட்டிற்குள் நுழைவதற்கு முன் நடந்தது அது. தென்னிந்திய சினிமா பாடல்களில் நடனமாடுவது அவ்வளவு சுலபம் கிடையாது. 

அந்த நடன இயக்குனர் பலர் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தினார். இவள் போன்ற பெண்கள் எல்லாம் பாலிவுட்டில் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை. உனக்கு நடனமாட தெரியவில்லை என்றால் ஏன் வருகிறாய்? என கேட்டார். 

எனக்கு அவமானமாக போய்விட்டது. மேக்கப் வேனிற்குள் சென்று அழுதேன். ஆனால் அதனை நான் சவாலாக எடுத்துக்கொண்டேன். அதன் பின் முறையாக நடனம் கற்றுக்கொண்டேன்” என அப்பேட்டியில் இஷா கோபிகர் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.