ரஜினியை ரிஜெக்ட் செய்த ஜெயலலிதா.. தாறுமாறு ஹிட் அடித்த படம்.. எது தெரியுமா?..

நடிகை ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு முன்பு சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோதே மிகவும் தைரியமான பெண்மணியாகவே இருந்து இருக்கிறார். பொதுவாக ரஜினிகாந்துக்கும் ஜெயலலிதாவுக்கும் பிரச்சினை இருந்ததாக ஒரு தகவல் எப்போதுமே கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு தான் வந்தது. அதாவது, ரஜினியின் ‘பில்லா’ படத்தில் ஸ்ரீப்ரியா, பிரவீணா, தேங்காய் சீனிவாசன், ஆர்.எஸ்.மனோகர், மனோரமா, கே.பாலாஜி, ஏவி.எம்.ராஜன் முதலானோர் நடித்தார்கள்.

முன்னதாக, இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஜெயலலிதாவை நடிக்க வைக்க அழைத்தார் தயாரிப்பாளர் கே பாலாஜி. கதையை கேட்டுவிட்டு முதலில் சமாதித்த அவர் சில நாட்கள் கழித்து வேண்டாம் சார்.. நான் இதுல நடிக்கிறதா இல்ல வேணும்னா ஸ்ரீபிரியாவை இந்த கேரக்டருக்கு போட்டுக்கோங்க சார் என்று மறுத்துவிட்டாராம்.

இதனிடையே, “எனக்கு பணம் முக்கியம் என்று நினைத்திருந்தாலோ, அப்போது பெரிய நடிகராக வளர்ந்துவிட்ட ரஜினியுடன் நடிக்கலாமே என்று நான் ஆசைப்பட்டிருந்தாலோ நடித்திருப்பேனே.. ஆனால், எனக்கு நடிக்க விருப்பமில்லை மறுத்துவிட்டேன்” என்று ஜெயலலிதா பல வருடங்கள் கழித்து மனம் திறந்து ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதில், விஷயம் என்னவென்றால் ரஜினியுடன் ஜெயலலிதா ஜோடியாக பில்லா படத்தில் நடித்திருந்தால், அந்த படம் இன்னொரு வரலாற்றுப் பதிவாகி இருக்கும் பி லெனின் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் சரத்பாவுடன் ஜெயலலிதா நடித்த நதியை தேடி வந்த கடல் திரைப்படம் நினைவு இருக்கிறதா? இந்த படம் 1980 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கலுக்கு வெளியானது.

இதுதான் ஜெயலலிதா நடித்த கடைசி படம். ஒருவேளை ஜெயலலிதா ரஜினியுடன் நடிக்க சம்மதித்து நடிக்கவும் செய்திருந்தால் 1980-ம் ஆண்டு பொங்கலுக்குப் பிறகு அதே வருடத்தில் அதே மாதத்தில் ஜனவரி 26 ஆம் தேதி வெளியான பில்லா படம் ஜெயலலிதாவின் கடைசி படமாக இருந்திருக்கும். ஏனோ, தெரியவில்லை ரஜினியும் ஜெயலலிதாவும் இணைந்து நடிப்பது நடக்காமலே போய்விட்டது.

மேலும், ஜெயலலிதா அரசியலுக்கு வந்ததால் மீண்டும் சினிமாவில் நடிக்க மறுத்ததாகவும், மற்றப்படி ஜெயலலிதாவுக்கும் ரஜினிகாந்துக்கும் பிரச்சனை என்பது உண்மையில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த விஷயத்தை ஜெயலலிதாவே ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அதில், சினிமாவில் தான் மீண்டும் கம்பேக் கொடுக்க திணறுவதாக வெளியான பத்திரிக்கை செய்திகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இப்படியான கடிதத்தை எழுதியிருக்கிறாராம்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.