தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அவரது அண்ணன் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் இருவருக்குமே மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பிறகு, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, எங்கேயும் காதல், தனி ஒருவன் உள்ளிட்ட பல்வேறு தொடர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தந்தை எடிட்டர் மோகன் எடிட்டர் பணியையும் தாண்டி திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக மாறி தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் வரலட்சுமி என்ற பெண்ணை விரும்பி திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்கள் தான் மோகன் ராஜா, ஜெயம் ரவி. இதில், மோகன் ராஜா இயக்குனராகவும் ஜெயம் ரவி முன்னணி நடிகராகவும் இருந்து வருகிறார். ஜெயம் ரவி ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சைரன். இந்த படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்கி இருந்தார். சைரன் படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார். சைரன் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்து இருந்தனர்.
இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படத்தில் முதல் வாரம் இறுதியில், நல்ல வசூலை பெற்றிருந்த நிலையில், அதன்பின்னர் சற்று பின்னடைவை சந்தித்து உள்ளது. அதன்படி, சைரன் படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. இந்த சைரன் படம் வெளிவந்து ஐந்து நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ.8 கோடிக்கும் மேல் வசூல் செய்து உள்ளது. வெளிவந்த 3 நாட்களில் ரூ. 7 கோடி வரை வசூல் செய்திருந்த இப்படம், 5 நாட்கள் முடிவில் ரூ.8 கோடி மட்டுமே வசூல் செய்து உள்ளது. மருமகனை நம்பி வந்து பணத்தை போட்ட மாமியாருக்கு இப்படியொரு நிலைமையா என திரை வட்டாரத்தில் பேசி வருவதாக கூறப்பட்டு வருகிறது.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.