எண்பதுகளில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஜெயஸ்ரீ. இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1955 ஆம் ஆண்டு தென்றலே என்னைத் தொடு என்ற படத்தில் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஜெயஸ்ரீ.
இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து நான்கு ஆண்டுகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்து வெளிநாட்டில் செட்டில் ஆக நினைத்த இவருக்கு சினிமா வாய்ப்பு கதவை தட்டியது.
குடும்பத்தினர் படிப்பு முடிந்து திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், இயக்குனர் ஸ்ரீதர் ஜெயஸ்ரீயை பார்த்ததும் அவரது தாயாரிடம் சென்று படத்தில் ஹீரோயினாக நடிக்க சம்மதம் கேட்டுள்ளார். ஆனால், ஆரம்பத்தில் குடும்பத்தினர் வேண்டாம் என்று கூறி உள்ளனர்.
இதனிடையே, சினிமாவில் நடித்தால், பணம் புகழ் வரும் என்று கூறியதும் அதற்கு ஒப்புக்கொண்டனர். அதன் பின்னர் தென்றலே என்னை தொடு படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார் ஜெயஸ்ரீ.
இவ்வாறாக படங்களில் நடித்து வந்த ஜெயஸ்ரீக்கு 1989 இல் அமெரிக்க மாப்பிள்ளை வரன் வந்துள்ளது. அப்போது, கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான புன்னகை மன்னன் படத்தில் முதலில் ஜெயஸ்ரீ தான் நடிக்க இருந்ததாகவும், ஆனால் கமல்ஹாசன் உடன் முத்த காட்சிகளின் நடிக்க வேண்டும் என்பதால் ஜெயஸ்ரீ வேண்டாம் என்று தெரிவித்துவிட்டாராம்.
இதனால், வேறொரு நிகழ்ச்சியில் கமிட்டாகியதால் கமலஹாசன் படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக ஜெயஸ்ரீ சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அந்த சமயத்தில் இயக்குனர் பாலச்சந்தர் எவ்வளவு சொல்லியும் மறுத்த ஜெயஸ்ரீ அதன் பின் ரஜினிகாந்த் படமான குரு சிஷ்யன் என்ற படத்தில் கௌதமி ரோலில் நடிக்க தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
ஆனால் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்து நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். ரஜினிகாந்தை ஒரு சமயத்தில் நீதான் என் படத்தில் நடிக்க மறுத்த முதல் நடிகை என்று கிண்டலும் செய்தாராம். அதன்பின் அமெரிக்கா வங்கி அதிகாரியான சந்திரசேகர் என்பவரை 1988 திருமணம் செய்து கொண்டு பின் சினிமாவில் இருந்து விலகி மகன்களை கல்லூரியில் படிக்க வைத்து வருகிறார்.
இதனிடையே, அமெரிக்க நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியாக பணியாற்றி வந்த ஜெயஸ்ரீ சமீபத்தில் எதிர்நீச்சல் செட்டிற்கு வந்து நடிப்பதாகவும் இருந்ததாம். இதுகுறித்து சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.