சினிமாவில் ஒருவருடைய வளர்ச்சி பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கு எதிரான சதித்திட்ட வேலைகள் நடக்கத்தான் செய்து வருகிறது. அதிலும், ஒருவர் மிகவும் பிரபலம் அடைந்து விட்டாலே அவர் மீதான பொறாமையும் அவரது குடும்பத்திற்குள் ஏதாவது பிரச்சனை என்றாலும், உடனே அவர்களை காலி செய்து விட வேண்டும் என்ற எண்ணம் பல பேருக்கு இருந்து வருகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாய் பல பேரை உதாரணமாக கூறலாம். அந்த வகையில், சமீபத்தில் கூட பிரபல வில்லன் நடிகரான பொன்னம்பலம் இதற்கு ஒரு மிகப்பெரிய உதாரணமாக இருக்கிறார். 80 மற்றும் 90 காலங்களில் தன்னுடைய உடல் பலத்தால் அனைவரையும் மிரள வைத்தவர் பொன்னம்பலம். இவருடைய சொந்த அண்ணனே, ஸ்லோ பாய்சன் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக இவரைக் கொல்ல முயற்சி செய்த சம்பவத்தை அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
பொன்னம்பலத்தைப் போலவே மற்றும் ஒரு வில்லன் நடிகர் ஸ்லோ பாய்சன் வைத்து கொல்ல முயற்சி செய்த சம்பவத்தில் மாட்டிக் கொண்டுள்ளார். எழுத்தாளர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர் என பண்முக திறமைகளை கொண்டவர் சக்கரவர்த்தி.
இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் சர்வம், சமர், அரிமா நம்பி, பாஸ்கர் தி ராஸ்கல், சிகாமணி போன்ற தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பொதுவாக இவர் வில்லன் கதாபாத்திரத்திலேயே அறியப்பட்டார். இவர் குறித்த செய்தி தான் தற்போது இணையதளத்தில் வாயிலாகி வைரலாகி வருகிறது. அதாவது சமீப காலமாகவே இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளதாம்.
இவரை பரிசோதித்த எத்தனையோ மருத்துவர்கள் சக்கரவர்த்திக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறி இருக்கிறார்கள். மேலும், எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாத இவருக்கு திடீரென்று இப்படி உடல்நிலை மோசமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதன் பிறகு தான் இவருடைய நெருங்கிய மருத்துவ நண்பர் ஒருவர் இவரை முழுவதுமாக பரிசோதித்து பார்த்தபோது இவருடைய உடலில் ஸ்லோ பாய்சன் இருப்பதை கண்டறிந்து இருக்கிறார்.
அதன் பிறகு ஆராய்ந்து பார்த்ததில், இவருக்கு நெருக்கமான ஒருவர்தான் கூடவே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இவர் சாப்பிடும் உணவுகளில் ஸ்லோ பாய்சனை கலந்து கொடுத்து இருக்கிறார். மேலும், இவரை தீர்த்துக்கட்டவும், முயற்சி செய்திருக்கிறார். தற்போது அவர் ஏன் அவ்வாறு செய்தார் எதற்காக என்பது குறித்து போலீசார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
This website uses cookies.