திரைப்படத் துறையை பொறுத்தவரை எவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டிருந்தாலும் கூட தொடர்ச்சியாக மார்க்கெட் இருந்தால் தான் அவர்களால் நட்சத்திர நடிகராக ஜொலித்து இருக்க முடியும். இதனிடையே வாய்ப்புகள் கிடைக்காமல் தொடர்ந்து ஒன்று இரண்டு படங்கள் பிளாப் ஆகிவிட்டார் அவரை வைத்து படம் எடுக்க யாரும் முன்வரமாட்டார்கள்.
அதன் பின்னர் அவர்களுக்கு மார்க்கெட் குறைந்து வெகுசில வருடத்திலேயே ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவார்கள். அப்படி வளர்ந்து வந்த வேகத்தில் நட்சத்திர நடிகர்களாக இருந்த பல பேர் இன்று ஆள் எங்கு இருக்கிறார்கள்? என்ற அட்ரஸ் கூட இல்லாமல் போனதுண்டு. அந்த வகையில் ஜீவா பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .
குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்தார் ராம் , கற்றது தமிழ், ராமேஸ்வரம், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, கச்சேரி ஆரம்பம் ,பாஸ் என்கிற பாஸ்கரன், சிங்கம் புலி, கோ ,வந்தான் வென்றான்,ரௌத்திரம், நண்பன், நீ தானே என் பொன் வசந்தம் ,என்றென்றும் புன்னகை உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .
இதில் ஜீவா நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் “சிவா மனசுல சக்தி” இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க அப்பத்தின் இயக்குனர் ராஜேஷ் ஜீவாவை சந்தித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என கதையை கூறியிருக்கிறார்.
உடனே ஜீவாவும் சூப்பரா இருக்கு… ஐடியா நல்லா இருக்கு சார் என்று சொல்லிவிட்டு ரூ. 4 கோடி சம்பளம் கொடுங்க என கேட்டாராம். இதைக் கேட்ட உடனே எடுத்து எடுப்பிலேயே இயக்குனர் ராஜேஷ் ஓடிவிட்டாராம். மார்க்கெட்டே இல்லாத ஜீவாவுக்கு இவ்வளவு ஆசை கொஞ்சம் ஓவர் தான் என்கிறார்கள் கோலிவுட் சினிமா வட்டாரங்கள். வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிவியா அதைவிட்டுவிட்டு இப்படி வாய்விட்டு வாழ்க்கைல மண் அள்ளி போட்டுக்கிட்டியே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.