தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அவரது அண்ணன் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் இருவருக்குமே மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பிறகு சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, எங்கேயும் காதல், தனி ஒருவன் உள்ளிட்ட பல்வேறு தொடர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தந்தை எடிட்டர் மோகன் எடிட்டர் பணியையும் தாண்டி திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக மாறி தெலுங்கு , தமிழ் , கன்னடம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் வரலட்சுமி என்ற பெண்ணை விரும்பி திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்கள் தான் மோகன் ராஜா, ஜெயம் ரவி.
இதில் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவியின் திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நமக்கு தெரியும். ஆனால், அவரது அப்பா மோகனின் திருமண வாழ்க்கை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், தற்போது அவர் பேட்டி ஒன்றில் தன் மனைவி வரலக்ஷ்மியுடன் தன் காதல் பயணத்தை குறித்து பேசிய வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில், நான் யாருக்கும் சொல்லாமல் கோவில் வச்சி இவங்களுக்கு தாலி கட்டிட்டேன். பின்னர் என் அம்மா என்னிடம் சண்டை போட்டு முறையாக திருமணம் செய்துக்கொள்ள சொல்லி நான் கட்டின தாலியை அறுத்துபோட்டுட்டாங்க. பின்னர் குடும்பத்தினர் , உறவுக்காரர்கள் முன்னிலையில் மீண்டும் ஒரு முறை தாலி கட்டி திருமணம் செய்துக்கொண்டோம். ஆனால், இந்த சம்பவத்திற்கெல்லாம் என் மனைவி வருத்தப்படவில்லை. காரணம் எப்படியோ நான் அவளுக்கு கிடைத்துவிட்டேன் என்பதிலே அவள் ரொம்ப சந்தோஷப்பட்டாள் என அற்புதமான காதல் பயணத்தை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இந்த அன்பான ஜோடி இன்னும் 100 ஆண்டுகள் சந்தோஷமாக வாழவேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். இதோ அந்த வீடியோ:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.