தமிழ் சினிமான்னா கிள்ளு கீரையா?.. பிரபல நடிகையை வறுத்தெடுத்த செய்யாறு பாலு..!

தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வந்த சங்கீதா பாடகர் கிருஷ் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். எனக்கு தமிழ் பிடிக்கவே பிடிக்காது. தெலுங்கு தான் பிடிக்கும். தெலுங்கு படத்தில்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதை பார்த்து எவ்வளவு பேர் கோபப்பட்டாலும், அது பற்றி எனக்கு கவலை இல்லை.

தெலுங்கு சினிமாவில் கிடைக்கும் மரியாதை தமிழ் சினிமாவில் கொடுக்க மாட்டார்கள். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கு இந்த மனப்பான்மை வருவதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை என்று சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசி உள்ளார்.

இது குறித்து பேசிய செய்யாறு பாலு ரசிகா எனும் படத்தில் ஆரம்பத்தில் அறிமுகமானவர்தான் இந்த சங்கீதா. பல படங்களில் நடித்தும் இவருக்கு சினிமாவில் சரியான இடம் கிடைக்கவில்லை. கன்னடத்தில், தீப்தி எனும் பெயரிலும் இவர் நடித்துள்ளார். தெலுங்கு சினிமா துறையை அதிகம் பிடிக்கும் என்று சொல்ல அவருக்கு கட்டாயம் உரிமை உள்ளது. ஆனால், தமிழ் பிடிக்காது என்றும் தமிழில் தன்னை மதிக்க மாட்டார்கள் என பேசுவது ஏற்புடையது அல்ல.

பிதாமகன் படம் எல்லாம் அவருக்கு மிகப்பெரிய வாழ்க்கையை கொடுத்த படம். வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக மாஞ்சோலை என்னும் படத்தில் நடித்த சங்கீதா தமிழ்நாட்டில் தான் வளர்ந்து நடிகையாக உருவானார். ஆனால், தமிழ் சினிமாவைப் பற்றி இப்படி கேவலமாக பேசுவது வளர்ந்த பின் தெலுங்கு தான் மரியாதை கொடுக்கிறது என்றெல்லாம் பேசுவது மிகவும் தவறான விஷயம். தமிழ் சினிமா என்ன இவருக்கு கிள்ளு கீரையா என செய்யாறு பாலு கண்டித்து பேசி இருந்தார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.