சினிமா / TV

மாதம்பட்டியார் மீது டைரக்ட் அட்டாக்! கவனம் பெறாத ஜாய் கிரிஸில்டாவின் மற்றுமொரு இன்ஸ்டா ஸ்டோரி?

மாதம்பட்டியார் மீது புகார்

பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சமூக வலைத்தளத்தில் பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்துகொண்ட  புகைப்படங்களை வெளியிட்டார். மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னுடைய குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை எனவும் கூறியிருந்தார். 

மாதம்பட்டி ரங்கராஜ்ஜிற்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டது. இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு. அந்த வகையில் ஸ்ருதியை முறையாக விவாகரத்து செய்யாமல் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதனை தொடர்ந்து ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரிடம் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார்  ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை எனவும் ஆனால் அவர் தன்னுடன் வாழ மறுக்கிறார், இதனை கேட்கப்போனால் தன்னை தாக்குகிறார் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவை “பொண்டாட்டி” என கொஞ்சுவது போன்ற பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் ஜாய் கிரிஸில்டா. 

சாபம் விட்ட ஜாய் கிரிஸில்டா…

இதனை தொடர்ந்து நேற்று ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டா ஸ்டோரியில், “பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார், தர்மம் ஜெயிக்கும்” என பதிவிட்டிருந்தார். இந்த இன்ஸ்டா ஸ்டோரி இணையத்தில் வைரல் ஆனது. ஆனால் இந்த  பதிவிற்கு முன்பு அவர் இதே போன்று வேறொரு பதிவையும் ஸ்டோரியில் வைத்திருந்தார். அதில், “ஏமாற்றுக்காரர்கள் ‘ஓய் பொண்டாட்டி ‘என்று கூறுவது ஒரே டோனில் தான் கேட்கிறது” என பதிவிட்டுள்ளார். 

மாதம்பட்டி ரங்கராஜ்,  “பொண்டாட்டி” என்று கொஞ்சுவது போன்ற வீடியோவை ஜாய் கிரிஸில்டா வெளியிட்டிருந்த நிலையில் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் இவ்வாறு ஒரு  பதிவை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.