நடிகை ஜோதிகா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.
பெரும்பாலும், தமிழ் படத்தில் நடித்து வந்த ஜோதிகா, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, மாதவன், அர்ஜூன், சரத்குமார் என அனைத்து முன்னணி நடிகருடன் நடித்துள்ளார்.
இதையும் படியுங்க: நடிகை ராதிகாவுக்கு என்னாச்சு? தீராத வலி : துடிதுடித்து போன உயிர்.. வைரலாகும் பதிவு!
இந்த நிலையில் வாழ்க்கையை கொடுத்த தென்னிந்திய சினிமாவை விமர்சித்துள்ளார் ஜோதிகா. அவர் சமீபத்திய பேட்டியில், பாலிவுட் சினிமாவை கம்பேர் செய்யும் போது தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம்.
ஆண் கதாபாத்திரத்தை மையாக கொண்டு எழுதப்படுவதுதான் அதிகம். பெண் கதாபாத்திரம் சும்மா ஹீரோவுக்கு ஜோடியாக டான்ஸ் ஆடவும், கிறுக்குத்தனமாக ஏதாவது செய்வது மட்டுமே இருக்கும் என கூறியுள்ளார்.
ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. தமிழ் சினிமாவை பொறுத்த வரை ஜோதிகா ஏற்ற கதாபாத்திரங்கள் எண்ணற்றவை. அவர் திருமணம் செய்யும் முன்பே, சிநேகிதியே, பச்சைக்கிளி முத்துச்சரம், சந்திரமுகி, மொழி போன்ற நாயகிக்கு முக்கியமான கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ளார்.
இதை தவிர திருமணத்திற்கு பின் மகளிர் மட்டும், 36 வயதினிலே, ராட்சசி என பெண்களுக்கு முக்கியமான கதாபாத்திரம் உள்ள படங்களிலேயே நடித்து வருகிறார். இந்த படங்களுக்கும் வரவேற்பு உள்ள போது ஏன் இப்படி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவை விமர்சிக்கிறார் என நெட்டிசன்கள் கடிந்து வருகின்றனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.