என்னுடைய கணவர் திரைப்படங்களைப் பொறுத்தவரை, கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன் என நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.
மும்பை: நடிகை ஜோதிகா நடிப்பில், சமீபத்தில் டப்பா கார்டெல் என்ற இந்தி வெப் சீரிஸ் வெளியானது. இந்தப் படத்தில் ஷாலினி பாண்டே, நிமிஷா சஜயன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “எனக்கு மோசமான திரைப்படங்களில்தான் பிரச்னை.
பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றியைப் பெற்ற பல மோசமான கமர்ஷியல் திரைப்படங்களை நான் பார்த்துள்ளேன். அந்தத் திரைப்படங்களெல்லாம் பெரிய மனதுடனே விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், என்னுடைய கணவர் திரைப்படங்களைப் பொறுத்தவரை, அது கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன்.
மேலும், படத்தின் சில பகுதிகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், மொத்தமாக படத்திற்கு பெரும் சிரத்தைக் கொடுத்து உழைத்திருக்கின்றனர். ஆனால், சில மோசமானப் படங்களைவிட கடுமையான விமர்சனங்களைச் சந்தித்ததை பார்த்தபோது, அது என்னை மிகவும் பாதித்தது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, ஜோதிகா மும்பை சென்றதில் இருந்தே தென்னிந்திய சினிமா பக்கமே திரும்பவில்லை எனக் கூறப்பட்டது. இதற்கு, அவரது மாமனாரும், நடிகருமான சிவகுமாரே காரணம் எனக் கூறப்பட்டாலும், இதனை மறுத்து இருவேறு காரணங்களைக் கூறினர் சூர்யா – ஜோதிகா தம்பதி.
இதையும் படிங்க: 3வது திருமணம் செய்ய ஆசை.. முன்னாள் காதலனை வைத்து 2வது கணவர் கொலை!
இவ்வாறான நிலையில், முன்னதாக இந்த வெப் சீரிஸ் தொடர்பான பேட்டியில் பேசிய ஜோதிகா, “நான் தென்னிந்திய சினிமாவில் இருந்து வருகிறேன். அங்கு ஆண்களை முன்னிலையாகக் கொண்ட படங்கள்தான் அதிகம் வருகின்றன. இப்போது மாற்றங்கள் வந்துள்ளன. பாலிவுட்டிலும் மாற்றங்கள் வந்திருக்கின்றன.
தென்னிந்தியாவில் பெரும்பாலும் ஆண்களுக்காகத்தான் அதிகம் கதை எழுதப்பட்டிருக்கும். பெண்கள் கதாபாத்திரம் முழுமை அடைந்ததாக இருக்காது. தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை, பெண்கள் நடனமாடவும், ஆண்களை புகழவும் தான் பயன்படுத்தப்படுகின்றனர். அது இப்போதும் உள்ளது” எனக் கூறியிருந்தார். இது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.