புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார்.
முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல எதிர்ப்புகளை மீறி சூர்யாவுடன் 2006 இல் திருமணம் ஜோதிகாவுக்கு நடந்தது. இதற்கு பின்னர், சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா இரு குழந்தைகளை பெற்று வளர்த்து வந்தார். அதன் பின் படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் ஜோதிகா. தமிழ் ,மலையாளம், இந்தி மொழிகளில் கமிட்டாகி ஜோதிகா நடித்து வருகிறார்.
முன்னதாக 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா தற்போது, படு பிஸியாக நடித்து வருகிறார். சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யாவுக்கு பெற்றுத் தந்த சூராரை போற்று படத்தை தற்போது, இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். சர்ஃபிரா என பெயர் வைக்கப்பட்ட அந்த படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.
இதனை சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்நிலையில், ஜோதிகா தான் அக்ஷய்குமார் உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கூறி இருப்பதாவது, வாழ்த்துக்கள் அக்ஷய்குமார் ஒரு ரசிகையாக தன் படுக்கையறையில் உங்களின் போஸ்டரை வைத்திருந்தவள். இன்று உங்களுடன் ஸ்பெஷலான 150 ஆவது படத்தை தயாரிக்கிறாள். இது மறக்க முடியாத அனுபவம் எனக்கு என்று தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.