2000ம் காலகட்டத்தின் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவின் டாப் இளம் ஹீரோவாக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002ஆம் ஆண்டில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த் தொடர்ந்து பார்த்திபன் கனவு, ஜூட், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு, பூ, மந்திரப் புன்னகை, நண்பன் உள்ளிட்ட பல பங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் பிரபல youtube சேனலுக்கு பேட்டி அளித்த ஸ்ரீகாந்த் அந்த பேட்டியில் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அப்படி ஒரு பேட்டியில் இயக்குனர் மணிரத்தினத்தைப் பற்றி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, ஆயுத எழுத்து படத்தில் சித்தார்த் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது ஸ்ரீகாந்த் ஆனால், அதற்கு டெஸ்ட் ஷூட் எல்லாம் நடந்து மணிரத்தினம் ஸ்ரீகாந்த்தை ஓகே செய்து இருக்கிறார்.
அதே நேரம், மனசெல்லாம் படத்தில் ஒரு ஃபயர் ஆக்ஸிடென்டில் மாட்டிக் கொண்டாராம் ஸ்ரீகாந்த். அப்போது, அவர் முகத்தில் நெருப்புப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம். இந்த பக்கம் ஸ்ரீகாந்த் மருத்துவமனையில், இருப்பதை ஒரு அட்வான்டேஜ் ஆக எடுத்துக்கொண்டு மனசெல்லாம் படத்தின் தயாரிப்பாளர் மனசெல்லாம் படத்திலும் அதற்கு அடுத்தபடியாக ஒரு படத்திலும் நடித்துக் கொடுத்துவிட்டு தான் வேறு படங்களில் நீ கமிட்டாக வேண்டும் என அக்ரிமெண்ட் போட்டு விட்டாராம்.
அதனால், ஆயுத எழுத்து படத்தில் ஸ்ரீகாந்தால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். அது மட்டுமல்லாமல் ஆயுத எழுத்து படத்திற்காக வாங்கிய அட்வான்ஸை ஸ்ரீகாந்த் அந்த நேரத்தில் திருப்பிக் கொடுக்க அதை பார்த்த மணிரத்தினம் என்னை மிகவும் இன்சல்ட் பண்ணுகிற மாதிரியான ஒரு செயல் இனிமேல் உன்னை வைத்து நான் படமே எடுக்க மாட்டேன் என்று முகத்துக்கு நேராகவே மணிரத்தினம் சொல்லிவிட்டாராம். அன்றிலிருந்து இன்று வரை மணிரத்தினம் படத்தில் ஸ்ரீகாந்துக்கு எதுவுமே நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.