பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா, ட்ரெயிலர் வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகளை விளாசி வருகிறார்.
பெரும்பாலும் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் கே ராஜன், யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் வெப் சீரிஸ்களை வச்சு செய்துள்ளார். அதாவது வெப் சீரிஸ்கள் கேவலமாக உள்ளன என கூறியுள்ள கே ராஜன், அவற்றுக்கு சென்சார் இல்லை என்பதால் கன்னாபின்னாவென வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
வெப் சீரிஸ்களில் கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்கள், பாலியல் காட்சிகளை அப்படியே அப்பட்டமாக காட்டுகிறார்கள் என்று கூறியுள்ள கே ராஜன், அவற்றில் வெட்டுக்குத்து அதிகம் என்றும் கூறியுள்ளார். வெப் சீரிஸ்கள் படு மட்டமாக உள்ளது என்று கூறியுள்ள கே ராஜன் அவற்றிற்கும் கட்டுப்பாடுகளும் சென்சாரும் வேண்டும் என கேட்டுள்ளார்.
குழந்தைகள் இரவில் வெப் சீரிஸ்களை பார்த்து சீரழிவதாகவும் பண்பாடும் சீரழிவதாகவுத் தெரிவித்துள்ளார் கே ராஜன். மேலும் இதனை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தடுத்து நிறுத்தும் வரை போராடுவேன் என்றும் எச்சரித்துள்ளார் கே ராஜன்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.