‘சான்ஸ் கேட்டால்… பிரண்டே நடுராத்திரி போன் பண்ணி அந்த மாதிரி பேசறான்’ – காஜல் பசுபதி டென்ஷன்..!

Author: Vignesh
24 March 2023, 1:01 pm
kaajal pasupathi-updatenews360
Quick Share

மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் சாண்டி. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் இவர், நடிகை காஜல் பசுபதியை முதலாவதாக திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த விவாகரத்து முடிவுக்கு நான் தான் காரணம் சாண்டி மீது எந்த தவறும் இல்லை என காஜல் கூறி இருந்தார்.

kajal pasupathi - updatenews360

இதனிடையே, சாண்டியை விவாகரத்து செய்த பிறகும் கூட அவருடனும் அவரது குடும்பத்துடனும் நல்ல நட்பை காஜல் பசுபதி தொடர்ந்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள காஜல் பசுபதி அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தைரியமாக கருத்துக்களை பதிவு செய்வார். அந்தவகையில், காஜல் பசுபதி, ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் காஜல் பசுபதி கூறியதாவது, வாய்ப்பு கேட்ட தன்னிடம் தனது நண்பர் பேசிய விதம் குறித்து வெளிப்படுத்தி காஜல் பசுபதி வேதனைப் பட்டுள்ளார்.

kaajal pasupathi-updatenews360

அதாவது காஜல் பசுபதியின் நெருங்கிய தோழியின் காதலருக்கு ஒரு தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவருடன் நல்ல நட்பு உள்ளதால் அவரிடம் சீரியலில் நடிக்க ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என கேட்டு சொல்லுமாறு காஜல் பசுபதி உதவி கேட்டுள்ளார். அதுவரை காஜல் பசுபதியிடம் மரியாதையாக பேசிய அந்த நண்பர், வாய்ப்பு கேட்டப் பிறகு நள்ளிரவில் போன் செய்து, தனக்கு இப்படி ஒரு பெண் வேண்டும் என சில அடையாளங்களை கூறி அசிங்கமாக பேசியதாக காஜல் பசுபதி தெரிவித்துள்ளார்.

kaajal pasupathi-updatenews360

இதனிடையே, இதை ஏன் அவன் தன்னிடம் கேட்க வேண்டும் என்று யோசித்த காஜல் பசுபதி, வாய்ப்பு கேட்டால் நண்பன் கூட இப்படிதான் பேசுவான் போல என நினைத்து அதன்பிறகு அந்த நண்பனிடம் பேசுவதையே முற்றிலும், தவிர்த்து விட்டதாக காஜல் பசுபதி தெரிவித்துள்ளார்.

kaajal pasupathi-updatenews360

மேலும், அந்த சம்பவத்துக்கு பிறகு யாரிடமும் வாய்ப்பு கேட்பதில்லை என்றும், கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், வேண்டும் என்றால் சம்பளத்தில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம் என்றும், வேறு எதிலும் அட்ஜெஸ்ட் செய்ய முடியாது என நடிகை காஜல் பசுபதி உறுதியாக தெரிவித்துள்ளார்.

Views: - 659

0

0