“மாநகரம்” திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “கைதி”. இத்திரைப்படத்தில் கார்த்தி நடித்திருந்தார். எஸ் ஆர் பிரபு இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் “விக்ரம்” திரைப்படத்தை இயக்கினார். இதில் “கைதி” திரைப்படத்தின் சில அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த வகையில் “கைதி”, “விக்ரம்” ஆகிய திரைப்படங்கள் Lokesh Kanagaraj Cinematic Universe-க்குள் (LCU) வந்தது.
அதனை தொடர்ந்து உருவான “லியோ” திரைப்படமும் LCUவுக்குள் வந்தது. இந்த நிலையில் இதன் அடுத்த திரைப்படமாக “கைதி 2” திரைப்படம் உருவாகும் என கூறப்பட்டது. லோகேஷ் கனகராஜ் “கூலி” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி-கமல் ஆகியோரை இணைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுமட்டுமல்லாது லோகேஷ் கனகராஜ் அருண் மாதேஸ்வரன் இயக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமாகிறாராம்.
இந்த நிலையில் “கைதி 2” திரைப்படம் உருவாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அதாவது தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவுடன் லோகேஷ் கனகராஜ் “மாநகரம்”, “கைதி” ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கு மட்டுந்தான் ஒப்பந்தம் போட்டிருந்தாராம். “கைதி 2” திரைப்படத்திற்கு ஒப்பந்தம் போடப்படவில்லையாம். அந்த வகையில் “கைதி 2” திரைப்படம் உருவாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இச்செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.