சினிமா / TV

விபத்தில் சிக்கிய காஜல் அகர்வால்? உடல்நலம் குறித்து அவரே சொன்ன விளக்கம் இதோ…

விபத்தில் சிக்கிய காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டாப் நடிகையாக  ஒரு காலகட்டத்தில் வலம் வந்த காஜல் அகர்வால், 2020 ஆம் ஆண்டு கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு நீல் என்ற ஆண் குழந்தையும்  உண்டு. இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கியதாக இணையத்தில் செய்திகள் தீயாக பரவியது. இந்த நிலையில் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். 

விபத்தில் சிக்கினேனா?

“நான் விபத்தில் சிக்கியதாக கூறும் சில அடிப்படையற்ற செய்திகளை கண்டேன். உண்மையில் இச்செய்திகள் முற்றிலும் பொய்யானவை. கடவுளின்  அருளால் நான் முற்றிலும் நலமோடு இருக்கிறேன், பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும்  உறுதியளிக்க விரும்புகிறேன். 

இது போன்ற தவறான செய்திகள் நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்” என தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். இவ்விளக்கம் மூலம் காஜல் அகர்வால் விபத்தில் சிக்கியதாக பரவி வரும் செய்திகளில் உண்மை இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. 

தமிழில் கடைசியாக “இந்தியன் 2” படத்தில் நடித்திருந்தார் காஜல் அகர்வால். இதனை தொடர்ந்து “இந்தியன் 3” படத்திலும் நடித்துள்ளார். மேலும் “இராமாயணா” திரைப்படத்தில் மண்டோதரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்  காஜல் அகர்வால். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.