நீண்ட நாட்களாக வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில்,தற்போது படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த விடுதலை-2 திரைப்படம் அமோக வரவேற்பை பெற்ற நிலையில்,அடுத்து வெற்றிமாறன் எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இதையும் படியுங்க: வெளுத்து வாங்கும் மதகஜராஜா…. காணாமல் போன பிரம்மாண்ட இயக்குனர்…!
அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் சிலர் வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா விலகிவிட்டார் என்ற தகவலும் கசிந்தது.இந்த நிலையில் விடுதலை-2 ரிலீசிற்கு பிறகு தன்னுடைய அடுத்த படம் வாடிவாசல் தான் என்று பேட்டி அளித்தார்.தயாரிப்பாளர் தாணுவும் படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது விரைவில் ஷூட்டிங் ஆரம்பிக்கும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் தற்போது பொங்கல் பண்டிகையின் சிறப்பாக ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் தாணு,தன்னுடைய X-தளத்தில் வெற்றிமாறன் மற்றும் சூர்யாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதில் “அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது”என்று பதிவிட்டிருந்தார்.
இதன்மூலம் விரைவில் படத்தின் ஷூட்டிங் வேலைகள் மும்மரமாக நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது.மேலும் வெற்றிமாறன் அடுத்ததாக மீண்டும் தனுசுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார்.இதன்மூலம் வெற்றிமாறன் அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை உற்சாக படுத்த உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.