Adjustment செய்தால் வாய்ப்பு கன்ஃபார்ம்.. அறந்தாங்கி நிஷா இப்படித்தான் பிரபலம்.. சர்ச்சையை கிளப்பிய KPY பிரபலம்..!

சீரியலுக்கு மாற்றாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் பிரபலம் அடைந்து வந்தன. அந்த சமயத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பல போட்டியாளர்கள் பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பாதியிலேயே வெளியேற்றப்பட்ட சசிகலா அந்த நிகழ்ச்சி குறித்தும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் குறித்தும் பரபரப்பாக பல குற்றச்சாட்டுகளை வைத்து தற்போது பிரபலமடைந்து வருகிறார்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக உள்ளே நுழைந்த சசிகலா, அறந்தாங்கி நிஷா, பழனி, நவீன் போன்றவர்கள் கலந்து கொண்ட சீசனில் தான் பங்கேற்றார். ஆனால், சசிகலாவின் பெர்ஃபார்மன்ஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையிலும் நிகழ்ச்சியிலிருந்து திடீரென நீக்கப்பட்ட அதற்கான காரணத்தை பற்றி தற்போது பேட்டியில் சசிகலா பேசி வருகிறார்.

அதாவது பழனியும் சசிகலாவும் புது புது ஜோக்குகளை சொல்லிக் கொண்டிருந்தபோது அறந்தாங்கி நிஷா மட்டும் பழைய ஜோக்குகளை சொல்லி ரசிகர்களை கவர்ந்தார் என்றும், அதுபோல நடுவர்களிடமும் அறந்தாங்கி நிஷா சரிசமமாக நிற்பார். ஆனால் நான் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள்.

பழைய ஜோக்குகளை இப்போதைக்கு ஏற்றவாறு அறந்தாங்கி நிஷா சொல்லி சொல்லியே மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் என்று தெரிவித்திருந்தார். இருந்தாலும், விஜய் டிவியில் இருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்ற காரணத்தை இப்போது வரை நான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன் உண்மையான காரணம் குறித்து இன்னும் எனக்கு தெரியவில்லை.

அதுபோல நான் பல பட்டிமன்றங்களில் பேச்சாளராகவும் இப்போதும் இருக்கிறேன். அது மட்டும் இல்லாமல் சில சமயங்களில் இவர் நடுவராகவும் பட்டிமன்றத்தை நடத்தி இருக்கிறார். இந்த நிலையில், சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததும் இவர் நடிக்கவும் செய்திருக்கிறார்.

ஆனாலும், கூடவே அட்ஜஸ்மென்ட் கேட்டு சிலர் தொந்தரவு செய்து வருவதாகவும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் நடிக்க வாய்ப்பு கன்ஃபார்ம் என்று அவர்கள் கூறுவதாகவும், அதற்கு தான் உன் கூட படுத்து தான் நான் வாய்ப்பு வாங்கணும் என்று எனக்கு தேவையில்லை. உன்கூட படுக்குறதுக்கு நாலு வீட்ல பத்து பாத்திரம் தேய்த்து குடும்பத்தை ஓட்டுவேன் என்று இவர் அதட்டியும் தட்டி கழித்தும் விட்டாராம். அது போலவே, ஆரம்ப காலங்களில் கணவனால் பல கொடுமைகளுக்கு ஆளான சசிகலா இப்போது, டிவி நிகழ்ச்சி பட்டிமன்றம் என்று தற்போது, பிஸியாக தன்னுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டும் குடும்பத்தையும் குழந்தைகளையும் பார்த்து வருவதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Poorni

Recent Posts

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

6 hours ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

7 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

7 hours ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

7 hours ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

8 hours ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

8 hours ago

This website uses cookies.