சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே புகழ் வெளிச்சத்தில் மின்னி கொண்டு இருக்கிறார். இவர் ஆன்மீக ரீதியாக நல்லது மட்டுமே செய்வார் என்றும், அப்படி ரஜினி தன்னை நம்பி வருபவர்களுக்காக ஏராளமான உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிந்த விஷயம் தான்.
அது மட்டும் இல்லாமல் ரஜினிகாந்த் ஏதாவது ஒரு விஷயம் கேள்விப்பட்டால் முதல் ஆளாக ஓடி வந்து நிற்பார் என்பது ஊர் அறிந்த ஒன்று. இதனாலேயே ரஜினிகாந்த்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஆனால் உலக நாயகன் கமல் இதுபோன்று இருப்பது கிடையாது என்ற குற்றச்சாட்டு பல வருடங்களாகவே இருந்து கொண்டு வருகிறது. மேலும் கமல் யாருக்கும் ஒரு ரூபாய் கூட உதவி செய்ய மாட்டார் என்றும், கஷ்டப்படுபவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூற மாட்டார் என்பது போன்ற கடும் விமர்சனங்கள் உலக நாயகன் மேல் இருக்கிறது.
இதனிடையே, சமீபத்தில் கூட நடிகர் மயில்சாமியின் இறப்புக்கு ரஜினி உள்ளிட்ட திரை பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய போது கமல் மட்டும் வரவில்லை என்று பலர் கிசுகிசுக்கத்தான் செய்தார்கள்.
ஆனால் உண்மையில் பிறருக்கு செய்யும் உதவிகளை உலக நாயகன் கமல் யாரிடமும் வெளி காட்டிக் கொண்டது கிடையாது என்பதே நிதர்சணமான உண்மை. சினிமா மட்டுமல்ல அந்தத் துறையில் இல்லாதவர்களுக்கும் கூட கமல் நிறைய உதவிகளை செய்து இருக்கிறார். ஆனால் இது எதுவும் மீடியாவில் கடுகு அளவு கூட கசியாமல் பார்த்து கொள்வது அவருடைய பெருந்தன்மை என்று சொல்லலாம்.
ஏனென்றால் இது போன்ற விளம்பரங்களை கமல் எப்போதும் விரும்புவதில்லை. ஆனால் ரஜினி விஷயத்தில் அப்படி கிடையாது. ரஜினி எங்கு சென்றாலும் அது ஒரு பப்ளிசிட்டியாக மாறிவிடும் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் அவர் செய்யும் உதவிகள் அனைத்தும் பிஆர்ஓ மூலம் மீடியாவில் விளம்பரப்படுத்தப்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கும். அப்படித்தான் நடிகர் பொன்னம்பலத்தின் கிட்னி பிரச்சினையும், அவர் பாதிக்கப்பட்டிருந்தபோது கமல் முதல் ஆளாக ஓடி வந்து உதவி செய்தார்.
அதே போன்று ரஜினியும் அவருக்கான மருத்துவ உதவியை செய்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் பொன்னம்பலம் உடல்நலம் தேறி வரும் வரையில் அவருக்கான செலவு மற்றும் குடும்ப செலவு அனைத்தையும், கமல் செய்தார் என்பது யாருக்கும் தெரியாது. மேலும் பொன்னம்பலத்தின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவை கூட கமல் ஏற்றுக் கொண்டாராம். இந்த விஷயம் பலருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை.
இதே போன்று பலருக்கும் கமல் ஏராளமான உதவிகளை செய்து இருக்கிறார். இருப்பினும் அதை அவர் விளம்பரப்படுத்தியது கிடையாது. இதுவே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படு வருகிறது. இப்படி நல்லது செய்தும் அவருக்கு கெட்ட பெயர் மட்டுமே கிடைக்கிறது. இதை பார்க்கும் போது ரஜினி போல் கமல் பிழைக்க தெரியாத மனிதராக இருக்கிறாரே என்ற எண்ணம் தான் அனைவருக்கும் தோன்றுகிறது.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.