சினிமா / TV

ரஜினி-கமல் இணையும் படம்? ஓபனாக கன்ஃபார்ம் செய்த கமல்ஹாசன்!

47 வருடங்கள் கழித்து இணையும் ரஜினி-கமல்

ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஆகிய இருவரும் தங்களது கெரியரின் தொடக்க காலகட்டத்தில் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இருவரும் தனி தனியே திரைப்படங்கள் நடிக்கத்தொடங்கி சமீப காலமாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார்கள். ரஜினி-கமல் ஆகிய இருவருக்கும் வணிக போட்டி நிலவி வந்தது. இந்த போட்டியால் இருவருமே சினிமாவில் வளர்ந்தனர்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி-கமல் ஆகியோர் மீண்டும் இணைந்து நடிப்பதாக ஒரு தகவல் வலம் வந்தது. ஆனால் இத்தகவல் உறுதிபடுத்தப்பட்ட தகவலாக இல்லை. இந்த நிலையில்தான் தற்போது ஒரு விருது விழாவில் இதனை உறுதி செய்துள்ளார் கமல்ஹாசன். 

நாங்கள் இணைகிறோம்…

சமீபத்தில் நடைபெற்ற SIIMA விருது விழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இது ஒரு தரமான சம்பவமாக இருக்குமா என எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் ஆடியன்ஸுக்கு பிடித்தால் நல்ல விஷயம்தான். அவர்களுக்கு சந்தோஷம் என்றால் நாங்கள் அதனை விரும்புவோம். இல்லை என்றால் மீண்டும் முயலுவோம். 

எங்களுக்குள்ளான போட்டியை உருவாக்கியது நீங்கள்தான். எங்களுக்குள்ளே எந்த போட்டியும் இல்லை. எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாங்கள் இணைகிறோம். இப்போதாவது இது நடக்கிறதே என நினைக்கிறோம்” என்று கூறினார். இதன் மூலம் ரஜினிகாந்துடன் தான் நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார் கமல்ஹாசன். கிட்டத்தட்ட 47 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் மீண்டும் இணைகின்றனர். இது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.