சினிமா / TV

மன்னிப்பு வேணும்னு கேட்டியாமே- கன்னட மொழி விவகாரத்தில் ஆக்சனில் இறங்கிய கமல்ஹாசன்?

மன்னிப்பு கேட்க முடியாது

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது என கூறினார். இவர் இவ்வாறு கூறியது கர்நாடக மாநிலத்தில் பெரும் எதிர்ப்பலைகளை உண்டாக்கியது. அங்குள்ள கன்னட அமைப்புகள், அரசியல்வாதிகள் என பலரும் கமலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காத வரை “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறிய நிலையில் கர்நாடகா பிலிம் சேம்பர் “தக் லைஃப்” திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளது. 

நீதிமன்ற படிகளை ஏறிய கமல்ஹாசன்

இந்த நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தை வெளியிட கர்நாடக அரசு, காவல்துறை மற்றும் கர்நாடக பிலிம் சேம்பர் ஆகியோர் தடை விதிக்கக்கூடாது என ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்னேஷனல் சார்பாக கமல்ஹாசன் கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

மேலும் “தக் லைஃப்” திரைப்படம் திரையரங்குகளில் தங்கு தடையின்றி வெளியாகவும் அத்திரைப்படம் வெளியாகும்போது போதுமான பாதுகாப்பும் வழங்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.