சினிமா / TV

கமல்ஹாசன் காதலித்த பெங்காலி நடிகை? சீக்ரெட்டை சுக்கு நூறாக உடைத்த ஸ்ருதிஹாசன்…

கமல்ஹாசனின் காதல்கள்?

கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் ஒரு காலகட்டத்தில் இளம் பெண்களை தனது வசீகரத்தால் கவர்ந்த புன்னகை மன்னனாக வலம் வந்தவர். அவர் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் நடிகை ஸ்ரீவித்யாவிற்கும் அவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. எனினும் அந்த காதல் கைக்கூடவில்லை. 

அதனை தொடர்ந்து ஆடை வடிவமைப்பாளர் சரிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவர்கள்தான் ஸ்ருதிஹாசனும், அக்சராஹாசனும். எனினும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு சரிகாவும் கமல்ஹாசனும் பிரிந்து வாழத்தொடங்கினார்கள். அதன் பிறகு நடிகை கௌதமிக்கும் கமல்ஹாசனுக்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டது. அந்த காதலும் ஒரு கட்டத்தில் பிரிவை சந்தித்தது. இவ்வாறு கமல்ஹாசனின் காதல் கதைகள் கோலிவுட்டில் மிகவும் பிரபலமானவை. 

கமல்ஹாசனின் பெங்காலி காதலி…

இந்த நிலையில் கமல்ஹாசன் காதலித்த பெங்காலி நடிகை குறித்த ஒரு செய்தியை ஸ்ருதிஹாசன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். அப்பேட்டியில் சத்யராஜும் ஸ்ருதிஹாசனும் கமல்ஹாசனை குறித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சத்யராஜ், “உங்களது தந்தை (கமல்ஹாசன்) மொழிகளை கற்றுக்கொள்வதில் வல்லவர். ஒரு பெங்காலி படத்தில் அவரே பெங்காலி பேசி நடித்திருந்தார்” என கூற, அதற்கு ஸ்ருதிஹாசன், 

“அவர் ஏன் பெங்காலி கற்றுக்கொண்டார் தெரியுமா? அந்த சமயத்தில் அவருக்கு பெங்காலி நடிகை அபர்ணா சென் மீது காதல் இருந்தது. அவரை கவரவேண்டும் என்பதற்காகத்தான் எனது தந்தை பெங்காலி கற்றுக்கொண்டார். சினிமாவிற்காக எல்லாம் அவர் பெங்காலியை கற்றுக்கொள்ளவில்லை. 

இதன் காரணமாகத்தான் ஹேராம் படத்தில் ஒரு பெங்காலி கதாநாயகியின் கதாபாத்திரத்திற்கு அபர்ணா என்று பெயர் சூட்டினார்” என கூறினார். ஸ்ருதிஹாசன் இவ்வாறு தனது தந்தை ஒரு பெங்காலி நடிகையை காதலித்தது குறித்த தகவலை பகிர்ந்துகொண்டது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது.  

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.