சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால் தற்போது திரைப்பட விநியோகத்திலேயே ஒரு தலைகீழ் மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளாராம் கமல்ஹாசன்.
அதாவது ஒரு திரைப்படம் வெளியாகி 4 வாரங்களிலேயே அத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகிவிடும். இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அதாவது 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாகிவிடுவதால் ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருவது குறைந்துப்போனதாக திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் கண்ணீர் வடித்தனர். இந்த நிலையில்தான் கமல்ஹாசன் தற்போது ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளாராம்.
அதாவது தான் தயாரித்து நடித்த “தக் லைஃப்” திரைப்படத்தை 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட ஓடிடி நிறுவனத்தாரிடம் கமல்ஹாசன் ஒப்பந்தம் போட்டுள்ளாராம். ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கும் ஓடிடியில் வெளியாவதற்கும் இடையே 8 வாரங்கள் இடைவெளி இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கத்திற்கு அதிகமாக வர வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனை பின்பற்றி பின்னாளில் இதனை பல தயாரிப்பாளர்களும் கடைபிடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.