ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக உறுப்பினராக சேர்வதற்காக உலகம் முழுவதும் 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குர்ரானா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ரணபீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, காஸ்டிங் இயக்குனர் கரண் மல்லி, தயாரிப்பாளர்கள் ஸ்மிருதி முந்த்ரா, பாயல் கபாடியா ஆகியோருக்கும் ஆழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன், ஆயுஷ்மான் குர்ரானா ஆகியோருக்கு வாக்களிக்கும் உறுப்பினருக்கான அழைப்பே வந்துள்ளது.அகாடமியில் உறுப்பினராக ஆவதற்கு விண்ணப்பங்கள் அவசியம் இல்லை எனவும் அகாடமியில் இரண்டு உறுப்பினர்கள் வேட்பாளர்களை பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
இந்த புதிய உறுப்பினர்களில் 55% அமெரிக்காவிற்கு வெளியே உள்ள 60 நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பரிந்துரைக்கான வாக்களிப்பு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 12 முதல் 16 வரை நடைபெறும் எனவும் ஜனவரி 22 ஆம் தேதி அதிகாரப்பூர்வ பரிந்துரைகள் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 2026 மார்ச் மாதம் 15 ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (40).இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.…
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் “இராமாயணா”. இத்திரைப்படம் இரண்டு…
திருப்புவனத்தில் பலியான அஜித்குமாரின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக முன்னேற்றகழக தலைவர் ஜான் பாண்டியன் பின்னர் செய்தியாளர்களை…
சமூக சேவை செய்யும் KPY பாலா! விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் KPY பாலா.…
This website uses cookies.