சினிமா / TV

கழுதையை பத்தி கவலைப்பட்டீங்களா? தெரு நாய் ஆதரவாளர்களை வம்பிழுக்கும் கமல்!

சூடுபிடிக்கும் தெரு நாய் விவகாரம்

சமீப காலமாகவே தெரு நாய் கடியால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் செய்திகளை பார்த்து வருகிறோம். குறிப்பாக சிறுவர் சிறுமியர் பலரும் தெருநாய் கடியால் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த உச்சநீதிமன்ற உத்தரவு விவாதத்திற்குள்ளானது. அதாவது டெல்லி பகுதியில் தெருநாய்களுக்காக காப்பகம் ஒன்றை அமைத்து அதில் அதனை பராமரிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

இந்த உத்தரவு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த இந்த உத்தரவை எதிர்த்து தெரு நாய் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். நாடு முழுவதும் தெரு நாய் ஆதரவாளர்கள் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார்கள். எனினும் அதன் பின் உச்சநீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை சற்று மாற்றியமைத்தது. 

அதாவது தடுப்பூசி போடப்பட்ட பிறகு நாய்கள், மீண்டும் அதே இடத்திற்கு விடப்படும் என அந்த உத்தரவை மாற்றியமைத்தது. எனினும் வெறிபிடித்த தெருநாய்களை தெருக்களில் விடக்கூடாது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த நடவடிக்கையை கொண்டு வர வலியுறுத்தியது. 

இதனை தொடர்ந்து சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் கூட சூடு பிடிக்கும் அனல் வாதம் ஒன்று நடைபெற்றது. இதில் நடிகை அம்மு, நடிகர் படவா கோபி உள்ளிட்ட பலரும் தெருநாய்களுக்கு ஆதரவாக பேசிய நிலையில் அவர்கள் ட்ரோலுக்குள்ளாக்கப்பட்டனர். 

கமல்ஹாசன் சொன்ன பதில்?

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது தெருநாய் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமல்ஹாசன், “இந்த விவகாரத்திற்கு தீர்வு ரொம்ப சிம்ப்பிள்.

கழுதை எங்கே காணும் என்று யாராவது கவலை படுகிறார்களா? நமக்காக எவ்வளவு பொதி சுமந்திருக்கிறது. கழுதையை யாராவது காப்பாற்ற வேண்டும் என பேசுகிறார்களா? எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும், எவ்வளவு முடியுமோ காப்பாற்ற வேண்டும். அவ்வளவுதான் என்னுடைய கருத்து” என பதிலளித்தார். இவர் கூறிய பதில் தெருநாய் ஆதரவாளர்களை சற்று கடுப்பில் ஆழ்த்தியுள்ளதாக தெரிய வருகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.