தமிழ் சினிமா தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை தீராத ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது கதை திருட்டு.
ஒரு படத்தின் கதை மற்றொரு படத்தின் கதை கருவையோ, அல்லது கதையின் சாயலையோ கொண்டிருக்கும்போது அந்த கதையின் படைப்பாளர் இது தன்னுடைய கதை என உரிமை கோருவது உண்டு. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் மீதும் கதை திருட்டு பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
தேவர் மகன் கதைக்கு முண்டியடித்து பெயர் போட்டுக் கொள்ளும் கமல் ஹாசன் இந்த கதையை எழுத வில்லையாம்.
ஏனென்றால் தேவர் மகன் படத்திற்கு முன்னர் கமல்ஹாசன் நடித்து வெளியான குணா படம் தோல்வி அடைந்ததால் பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதற்காக கங்கை அமரனிடம் கதை கேட்டு அந்த கதை தான் தேவர் மகன் எனவும் அதற்கு முதலில் அதிவீரபாண்டியன் என பெயர் வைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்க்கான கதை கதையாசிரியர் கலைஞானத்தினுடையது எனவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: கமல்ஹாசனின் மனைவியை காதலித்த பிரபல நடிகர் : வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!
இப்படத்திற்கு கமல்ஹாசன் அதிக பணம் தருவதாக கூறி வெறும் 25 ஆயிரம் மட்டும் தனக்கு கொடுத்ததாக ஒரு பேட்டியில் கலைஞானம் தெரிவித்திருப்பார். இந்திய சினிமாவின் பெரும் அடையாளமாக கருதப்படும் கமல்ஹாசனின் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருந்த தேவர் மகன் திரைப்படம் ஒரு திருடப்பட்ட கதை என்பது மோசமான செயலாக கருதப்படுகிறது.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
This website uses cookies.