கடந்த ஐந்து தசாப்தங்களில் மிக உயர்ந்த இந்திய நடிகராக கமல்ஹாசன் இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ மூலம் ஒரு பெரிய சாதனையை செய்து உள்ளார். அனிருத் இசையில் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில், சூர்யா இணைந்து நடித்த இந்த படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் நானூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
தற்போது ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கமல் நடிப்பில் படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டி இருக்கிறார். அதன் பிறகு கமல் எச்.வினோத் இயக்கத்தில் ‘KH 233’ மற்றும் பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் ‘KH 234’ இல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, இடையில் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே நடிக்கும் பான் இந்தியன் படமான ‘ப்ராஜெக்ட் கே’ இல் கமல் முக்கிய வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் பிரபாஸ் தற்போது ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் நடித்து வருகிறார். மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார்.
மேலும், வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பாளர் அஸ்வினி தத், இந்த படத்தில் கமல் மட்டுமே வில்லன் கேரக்டரை செய்ய முடியும் என்று கருதியதாகவும், மேலும், 150 கோடி சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சனும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும், அவருக்கும் பெரும் தொகை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த படத்தில் சூர்யா, மகேஷ் பாபு, திஷா பதானி ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல் ‘ப்ராஜெக்ட் கே’ படத்திற்காக 20 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும், தனது மற்ற படங்களுக்கும் ‘பிக் பாஸ் தமிழ் 7’ படத்திற்கும் இடையே ஒரே நேரத்தில் அதை முடித்துவிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த செய்தி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.