அமெரிக்கர்கள் பிற்போக்குத் தனமானவர்கள்; எம் பி நடிகையின் அதிர வைத்த பதிவு…

நடிகையும் -அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், சமூக வலைதளத்தில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மீதான மீம்ஸ்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு பதிவினை போட்டிருந்தார். அதில் அமெரிக்கர்கள் இந்தியர்களை விட. பிற்போக்குத் தனமானவர்கள் மற்றும் மோசமானவர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

கமலா ஹாரிஸ் குறித்த பெரும்பாலான மீம்ஸ்கள் கமலா ஹாரிஸும், முன்னாள் சான் பிரான்சிஸ்கோ மேயர் வில்லி பிரவுனும் 1990 காலத்தில் காதல் உறவிலிருந்ததாகவும், கமலா ஹாரிஸ் 29 வயதாக இருக்கும்போதே 60 வயதிருக்கும் மேயர் வில்லி பிரவுனுடன் பழகி வந்ததாகவும் குறிப்பிட்டு ஏகப்பட்ட மீம்ஸ்களை வைரல் செய்து வந்தனர். இந்நிலையில் கமலா ஹாரிஸ் பற்றிய இதுபோன்ற வதந்தியான மீம்களுக்குப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகையும், பாஜக மக்களவை உறுப்பினருமான கங்கனா இது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “நான் ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கவில்லை. இருப்பினும் மதிக்கத்தக்க ஒரு பெண் தலைவரை இப்படி கீழ்த்தரமாகப் பேசுவதை, ட்ரோல் செய்வதையும் நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நவீன நாடுகளில் பிற்போக்குத்தனங்கள் நடப்பதைப் பார்க்கும்போது, அதற்கு இந்தியா எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது.

இந்தியர்களை விட அமெரிக்கர்கள் மிகவும் பிற்போக்குத்தனமானவர்கள்” என்று பதிவிட்டு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் தனது கண்டத்தைத் தெரிவித்திருக்கிறார்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.