சினிமா துறையை பொறுத்தவரை போதை பொருள் வழக்கில் சிக்குவது தொடர் கதையாகி தான் வருகிறது. ஹிந்தியில் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பின் அவரது மரணத்தில் போதை பொருள் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக திடீரென்று தகவல் வெளியானது விசாரணையில் அம்பலமானது.
அதில், ஏராளமான முன்னணி நடிகைகளும் நடிகர்களும் சிக்கினர். தெலுங்கு திரையுலகில் அதேபோல் போதைப்பொருள் தலைதூக்கி உள்ளதாக தற்போது தகவல் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், தயாரிப்பாளர் கே பி சவுத்ரி என்பவருக்கு தொடர்பு இருப்பது உறுதியானதையடுத்து, அவரை போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவருடன் ஏராளமான நடிகைகளும் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. ஜோதி மற்றும் சுரேகா வாணி ஆகியோருடன் கே பி சவுத்ரி போனில் அதிக அளவில் உரையாடியதும் விசாரணையில் அம்பலமானது. சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கி கைதான கே பி சவுத்ரியுடன் நடிகை சுரேகா வாணியும் அவரது மகள் சுப்ரீதா ஆகியோர் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இப்படி போதை பொருள் விவகாரம் டோலிவுட்டில் சூடுபிடித்து வரும் நிலையில், பிரபல தயாரிப்பாளரான சந்திரசேகர் தனது மனைவி நமிதா போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக பரபரப்பாக புகாரில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி போதைப்பொருள் வியாபாரியாக உள்ள லக்ஷ்மிஷ் பிரபு உடன் தனது மனைவி தகாத உறவு வைத்திருந்ததாகவும், ஒரு முறை இருவரும் ஒரே வீட்டில் இருந்தபோது தானே கையும் களவுமாக பிடித்ததாக சந்திரசேகர் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், சந்திரசேகரின் மனைவி நமிதா தன் கணவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் எனவும், அவரது நண்பர்கள் அருண், ஹேமந்த் ஆகியோர் தன்னை தாக்கியதாகவும், தன் பங்கிற்கு கணவர் மீது போலீசாரிடம் புகார் கொடுத்து இருப்பதாக நமிதா தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் திருமணமாகிய இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இருவரும் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.