பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி வந்தார்.அவருடைய சமீபத்திய படங்கள் ‘ஜப்பான்’ மற்றும் ‘மெய்யழகன்’ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை,இதையடுத்து,தற்போது ‘வா வாத்தியார்’ மற்றும் ‘சர்தார் 2’ படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இதையும் படியுங்க: படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!
இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 2022ல் வெளியான ‘சர்தார்’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது,இதன் தொடர்ச்சியாக, சர்தார் 2 படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடைபெற்று வந்தது.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார்,மேலும் மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன்,பாபு ஆண்டனி,ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மைசூரில் படமாக்கப்பட்ட கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் மிகவும் ஆக்ஷன் நிறைந்ததாக எடுக்கப்பட்டு வருகிறது,அப்போது எதிர்பாராத விதமாக கார்த்திக்கு காலில் காயம் ஏற்பட்டு வீக்கம் ஆகியுள்ளது,இதனால் மருத்துவர்கள் ஒரு வாரம் முழுமையான ஓய்வு வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்காரணமாக படக்குழுவினர் சர்தார் 2 படப்பிடிப்பை ரத்து செய்து சென்னை திரும்பியுள்ளனர்,ஒரு வாரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.