தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கரு பழனியப்பன் : கொந்தளித்து போட்ட பதிவு!!

கரு பழனியப்பனின் பூர்வீகம் காரைக்குடி; அப்பா சின்ன கருப்பைய்யா, அம்மா நாகம்மை.புத்தகம் என்றால் கரு பழனியப்பனுக்கு சிறு வயதில் இருந்தே கொள்ளை பிரியம். கண்ணதாசன், ஜெயகாந்தன், அசோகமித்திரன் உள்ளிட்ட பிரபல கதை ஆசிரியர்கள் அப்போதே அவருக்கு அறிமுகமாகி விட்டனர்.

மதுரை செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளியில் பள்ளிபடிப்பை முடித்தவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பயின்றார். தொடர்ந்து மதுரை தியாகராஜா கல்லூரியில் முதுகலை பட்டத்தையும் முடித்தார்.புத்தக வாசிப்பும், தொடர்ந்து படங்களை பார்த்தலும் கரு பழனியப்பனை சினிமாவின் பக்கம் அழைத்து வந்தது.

1994 ஆம் ஆண்டு திரைத்துறைக்குள் நுழைந்த கரு பழனியப்பன் இயக்குநர் பார்த்திபனுடன் ‘அவர் புள்ள குட்டிகாரன்’, ‘ஹவுஸ் ஃபுல்’ ஆகிய படங்களில் பணியாற்றினார். தொடர்ந்து இயக்குநர் எழிலிடம் சேர்ந்த பழனியப்பன் ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பெண்ணின் மனதைத் தொட்டு’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார்.

.2003 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடித்த ‘பார்த்திபன் கனவு’ படத்தை இயக்கி திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானார். விமர்சகர்களிடம் இருந்து பாராட்டை பெற்ற இந்தப்படத்திற்காக மாநில அரசின் சிறந்த இயக்குநர் விருதும் அவருக்கு கிடைத்தது.

தொடர்ந்து சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், சதுரங்கம், மந்திரப்புன்னகை படத்தை இயக்கினார். இதில் மந்திரப் புன்னகை படத்தில் இயக்குநர் மட்டுமல்லாமல் நடிகராகவும் நடித்தார்.

இவரது மேடை பேச்சுகளும், பேட்டிகளும் மக்களிடம் பிரபலமான நிலையில், பிற நடிகர்களின் படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தது. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

ஜீ தமிழின் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த நிகழ்ச்சி இவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

இந்த நிலையில் 4 வருடமாக அந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த கரு பழனியப்பன், சமூகநீதி,சுயமரியாதை,திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! நன்றி என பதவிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.