சினிமா / TV

உடம்பே சிலிர்த்துவிட்டது… மறைந்த ரத்தன் டாடா பற்றி கவிஞர் வாலி சொன்னது – வீடியோ!

புகழ்பெற்ற வர்த்தகத் தலைவரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் எமரிட்டஸ் தலைவருமான ரத்தன் டாடா அக்டோபர் 9ம் தேதி காலமானார். அவருக்கு வயது 86. அவரது அமைதியான தலைமையின் மூலம், ரத்தன் டாடா $5-பில்லியன் குழுவை 100 நாடுகளில் செயல்பாடுகளுடன் $100-பில்லியனாக மாற்றியது மட்டுமல்லாமல், இந்தியாவின் கட்டமைப்பை வடிவமைத்தார்.

தனக்கு சொந்தமான ஒவ்வொரு வணிக முயற்சியிலும் அவர் இந்தியாவை முதன்மைப்படுத்தினார். ரத்தன் டாடா தனது வணிக புத்திசாலித்தனத்தால் பிரகாசித்தார். வணிகம் சார்ந்த திறமைசாலியாக இருந்தது மட்டுமல்லாமல் சிறந்த மனிதராகவும் ரத்தன் டாடா பார்க்கப் பட்டார்.

ஏழை எளிய மக்களுக்கு உதவிகளையும் செய்து மக்களின் மனதில் இடத்தைப் படித்தார். வணிக ரீதியாக அவரது திட்டங்களும்,தொழில்களும் முன்னிலையில் இருந்தாலும் கூட ரத்தன் டாடாவின் எண்ணங்கள் எப்போதும் எளிய மக்களையும் அவர்களின் வாழ்க்கை அமைப்புகளையும் சுற்றி இருந்தது.

இதனிடையே ரத்தன் டாடாவின் மரணம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று வரை பலரால் அவரது மரணத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பலரும் ரத்தன் டாடாவின் நற்குணங்களை பற்றி பேசி வருகிறார்கள். இந்த நிலையில் கவிஞர் வாலி இரத்தன் டாட்டா உடனான ஒரு சந்திப்பை கூற்றி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில் ஒரு நாள் பயங்கர இடி, மழை, மின்னல் அந்த மழையிலும் நான் பீச் ஓரமா நடந்து வந்து கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு கார் என்னுடைய அருகே வந்து நின்றது. உடனே காரின் கண்ணாடி இறக்கி யங் பாய் நீ எங்கே போற வா கொண்டு போய் இறக்கி விடுகிறேன் எனக்கூறி நான் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு போய் இறக்கி விட்டார்.

இதையும் படியுங்கள்: கழண்டு விழுறது கூட தெரியாம காட்டுறியேமா? வேதிகாவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

உடனே நான் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு உங்களது பெயர் என்ன என கேட்டவுடன். மக்கள் எல்லோரும் என்னை தாத்தா என அழைப்பார்கள் என கூறினார். அந்த அளவுக்கு மிகச்சிறந்த மனிதாபிமானம் கொண்ட மனிதர் தான் ரத்தன் டாட்டா என கவிஞர் வாலி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். இந்த வீடியோ கேட்டதும் பலருக்கும் சிலிர்த்து போய்விட்டதாக இந்த வீடியோவை ஷேர் செய்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Anitha

Recent Posts

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

32 minutes ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

36 minutes ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

56 minutes ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

1 hour ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

2 hours ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

2 hours ago

This website uses cookies.