ஒதுங்கிய சூர்யா, இறங்கிய கவின்.. 18 வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் 2-ம் பாகம்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் ஆரம்பத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மக்களுக்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்த கவின் லிப்ட் திரைப்படத்தில் நடித்து முகம் அறியப்பட்டார். அதன் பிறகு டாடா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கினார்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கவினுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை ரூ. 1 கோடியாக நடிகர் கவின் உயர்த்தினாராம். இதன்பின், இவருடைய சம்பளம் ரூ. 3 கோடி என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ரூ. 7 கோடியாக உயர்த்திவிட்டாராம். ஒரே ஒரு படம் ஹிட் ஆனதும் கவின் இப்படி மாறிவிட்டாரே என சினிமா வட்டாரத்தில் விமர்சித்தும் வந்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் கவின் கலகலப்பு 3 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், இயக்குனர் தரப்பில் இது குறித்து மறுக்கப்பட்டுள்ளது. தற்போது, கவின் நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்றில் இரண்டு கோடியிலிருந்து ஆறு கோடி ரூபாய் வரை அவர் சம்பளம் கேட்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனை கேட்ட தயாரிப்பாளர்கள் ஆள விடுடா சாமி இனிமே சத்தியமா உங்கிட்ட வர மாட்டேன் என்று ஒரு கும்பிடு போட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பிரபல நடிகையுடன் வருட கணக்கில் ரகசிய உறவு?.. KS ரவிக்குமார் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..!

மேலும், தற்போது இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். இன்று மே 10 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

மேலும் படிக்க: 2 கல்யாணம்.. 2 விவாகரத்து.. பிரபல நடிகையின் ரகசியத்தை புட்டு புட்டு வைத்த பயில்வான்..!

இந்நிலையில், கோடிகளில் சம்பளம் கேட்பதாகவும் சிறு தயாரிப்பாளர்களிடம் கவின் பேச சிரமப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, பதிலளித்த கவின் எனக்கும் தயாரிப்பாளருக்கும் தான் விவாதமாக இருக்கும், நான் கேட்கிறேன் என்பதற்கு அதையே கொடுக்க மாட்டார்கள்.

மேலும் படிக்க: பிரபல நடிகையால் சுந்தர் C குடும்பத்தில் வெடித்த சண்டை.. கடுப்பில் கத்திய குஷ்பூ..!

நீங்கள் எந்த பத்திரிகையாளர்கள் என்று எனக்கு தெரியாது. இதற்கு முன்னாடி வேலை செய்யும் இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு வேலைக்கு செல்லும்போது அதே சம்பளத்தை கேட்க மாட்டோம். அதிகமாக தான் கேட்போம் அதையும் தீர்மானிப்பது முன்னாடி வாங்கிய சம்பளம் தான் தீர்மானிக்கும். சீரியலில் நடிக்கும் போது ஆயிரம் ரூபாயும் அதன்பின்னர் ஐந்தாண்டுகளுக்கு பின்னர் என் சம்பளம் 6000 ரூபாய் சம்பளம் என்பது நாம் படம் எவ்வளவு மார்க்கெட் பெறுகிறது என்பதை தீர்மானிக்கிறதே தவிர தனிப்பட்ட முறையில் யாரும் தீர்மானிப்பது இல்லை.

மேலும் படிக்க: ரீலா… ரியலா?.. நடு ரோட்டில் போலீசாருடன் வாக்குவாதம் செய்த நிவேதா பெத்துராஜ்.. வெளியான உண்மை..!

இதுதான் என்னோட நாலாவது படம் இதை முடிக்கவே ஒரு வருடம் ஆகிவிடும். இந்த காரணத்திற்காக தான் நான் சில படங்களுக்கு நோ சொல்லி இருக்கிறேன். ஆனால், நோ சொல்வதற்கு முக்கிய காரணம் யாரையும் காத்திருக்க வைக்க வேண்டாம் என்று நினைத்து எவ்வளவு பேர் இருக்கிறார்கள் அவர்களை வைத்து எடுத்துக் கொள்ளட்டும். இதெல்லாம், தான் காரணம் சுவாரசியத்திற்காக பேசுவதற்கு நன்றாகத்தான் இருக்கும் இதுதான் உண்மை என்று கவின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: நாக்குல சனி.. கல்லெடுத்து அடிச்சு கொன்றுவாங்க.. – வடிவேலுவை தாக்கி பேசிய பிரபலம்..!

மேலும் பேசுகையில், நம்முடைய ராசி நட்சத்திரத்தை கோவில் மேட்ரிமோனியில் தானே கேட்பார்கள். என்னிடம் ஒரு ஆடிஷனில் என்ன ராசி நட்சத்திரம் என்றெல்லாம் கேட்டார்கள். அந்த ராசி நட்சத்திரம் சொல்லியும் என்னை ஆடிஷனில் எடுத்துக் கொள்ளவில்லை. இது ஏழு எட்டு வருஷத்துக்கு முன்பு நடந்தது. அவர் சொன்னது சரிதானே ஆடிஷன் எல்லாம் போகாமல் ஒரு டிராகன் படத்தில் இருக்கும் அளவிற்கு வந்துட்டோம்ல என்று கவின் காமெடியாக தெரிவித்திருக்கிறார்.

தற்போது, கவின் குறித்து ஒரு செய்தி இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, 90 கிட்ஸ் திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல் இந்த திரைப்படம் அனைத்து 90 கிட்ஸ் களுக்கும் பிடித்திருக்கும். என்எஸ் கிருஷ்ணன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படம். நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில், ஜோதிகா, பூமிகா, வடிவேலு என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு, ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய முன்பே வா பாடல் தற்போது வரை ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இருந்து வருகிறது. தற்போது ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில், ஹீரோவாக நடிக்க கவினிடம் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.