தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.இவர் மலையாளத்தை பூர்விகமாக கொண்டாலும் தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தன.
சூர்யா, விஜய், ரஜினி,சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் சமீபத்திய நடிப்பில் வெளியான மகாநதி திரைப்படம் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது என சொல்லலாம்.பழம்பெரும் நடிகை சாவித்ரியின் கதையை வைத்து எழுதப்பட்ட இந்த படத்தில் நடிப்பில் அசத்தி இருப்பார்.இப்படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது.
இதையும் படியுங்க: காதை இனிமையாக்கும் ராஜாவின் குரல்… விடுதலை 2 படத்தின் பாடல் வெளியீடு…!
கீர்த்தி சுரேஷ் குறித்த வதந்திகளும் அவ்வப்போது வெளியாகி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, கீர்த்திக்கு தூரத்து உறவினர் ஒருவருடன் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது. அதன் பிறகு, ஒரு அரசியல் பிரபலத்தின் மகனுடன் திருமணம் என பேசப்பட்டது.
இந்த தகவல்களை அவரது தந்தை சுரேஷ் முற்றிலுமாக ஊடகத்தினரிடம் மறுத்தார். இப்போது, மீண்டும் அதே போன்ற ஒரு தகவல் பரவி வருகிறது.
32 வயதாகும் நடிகை கீர்த்தி சுரேஷும், இந்திய அளவில் வெற்றிகரமான இசையமைப்பாளராக விளங்கும் ராக் ஸ்டார் அனிருத்தும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவி வருகிறது. இவர்கள் இருவரும் ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக வேலை பார்த்து இருக்கின்றனர்.
அது மட்டுமன்றி இருவருக்கும் ஒரு நல்ல நட்பும் இருந்து வருகிறது.தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, கீர்த்திக்கும் அனிருத்திற்கும் வரும் டிசம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. திரைத்துறையில் பிசியாக வலம் வரும் அனிருத் பிரபல தாெழில் அதிபர் ஒருவரின் மகளை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கீர்த்திக்கும் இவருக்கும் இடையே இருப்பது வெறும் நட்பாக கூட இருக்கலாம் என்ற தகவலும் சொல்லப்படுகிறது . அனிருத் ரஜினிகாந்தின் கூலி,அஜித்தின் விடாமுயற்சி விஜய்யின் தளபதி 69 உள்பட பல முக்கிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.