கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.
அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.
இவர் நடித்த அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்தார், இந்த படத்துக்காக கூட இவர் மீண்டும் தேசிய விருது பெறுவார் என எதிர்பார்க்க படுகிறது. பின் தெலுங்கில் இவர் மகேஷ் பாபுவுடன் நடித்த சர்காரு வாரி பட்டா என்னும் படம் Release ஆகி பட்டையை கிளப்பி விட்டது.
முதலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், கடந்த சில நாட்களாக கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பியுள்ளார். இதனால், கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வரும் அவர், சினிமாவிலும் கவர்ச்சியை காண்பிக்க ஆரம்பித்துள்ளார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் நடிகர் நானியுடன் தசரா படத்தில் நடித்துள்ளார். தசரா படத்தின் பிரமோஷனுக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் மும்பை சென்றிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தசரா படத்தில் நானி மது குடிக்கும் ஸ்டைலை பார்த்து அப்படியே செய்திருக்கிறார். குடித்துவிட்டு பாட்டிலை போட்டுள்ள கீர்த்தி சுரேஷின் வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் கலவையான கமெண்டுகளை பெற்றது.
இந்நிலையில், நடிகர் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த தசரா படம் திரைக்கு வந்தது. வசூல் ரீதியாவாகவும், மக்கள் மனதிலும் ஏகபோக வரவேற்பை தற்போது பெற்று வருகிறது.
இதுபோக தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் ”மாமன்னன்” திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படி கெரியரில் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
இதற்கிடையில் நடிகர் விஜய்யுடன் ரகசிய காதலில் இருந்து வருவதாகவும் இதனால், சங்கீதாவை பிரிந்து கீர்த்தி சுரேஷை இரண்டாம் கல்யாணம் செய்யவுள்ளார் என்ற செய்திகளும் வெளியானது.
இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தெலுங்கு இயக்குனரும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தின் இயக்குனருமான வெங்கி அட்லுரியுடன் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒருவேல அப்படியிருக்குமோ என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.