சினிமா / TV

ஆசைல மண்ணள்ளி போட்டுட்டீங்களே- கியாரா அத்வானியின் பிகினி காட்சிகளை நீக்கிய சென்சார் போர்டு

கூலிக்கு போட்டியாக வரும் திரைப்படம்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதே நாளில் “கூலி” திரைப்படத்திற்கு போட்டியாக ஹிரித்திக் ரோஷன், ஜூனியர் என் டி ஆர், கியாரா அத்வானி ஆகியோரின் நடிப்பில் உருவான “வார் 2” திரைப்படமும் வெளியாகிறது. 

“வார் 2” திரைப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். ஆதித்யா சோப்ரா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். வட இந்தியாவில் இத்திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு உள்ளது. இதனிடையே இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ஆவான் ஜாவான்” என்ற பாடல் வெளியானது. இதில் கியாரா அத்வானி ஒரு காட்சியில் பிகினி உடையில் வலம் வந்து ரசிகர்களை கொள்ளைகொண்டார். 

இப்பாடல் வெளியாவதற்கு முன்பே கியாரா அத்வானியின் பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில் சென்சார் போர்டு இக்காட்சிகளை நீக்கும்படி கூறியுள்ளதாக தகவல் வெளிவருகிறது. 

கத்திரி போட்ட சென்சார் போர்டு

ஆபாசமான காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய தணிக்கை வாரியம் வலியுறுத்தியதன் பெயரில் இப்பாடலில் இடம்பெற்ற கியாரா அத்வானியின் 9 வினாடி கவர்ச்சிகரமான பிகினி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாம். இச்செய்தி கியாரா அத்வானி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

இக்காட்சியை திரையில் பார்க்க இளம் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது பிகினி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.