சினிமா / TV

விஜய்யை தொடர்ந்து அரசியலுக்குள் நுழையும் மற்றொரு முன்னணி நடிகர்? இது செம டிவிஸ்ட்…

புதிய பாதையை தேர்ந்தெடுத்த விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக உருவெடுத்துள்ளார். வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் போட்டியிடவுள்ளார். தேர்தலை சந்திப்பதற்கான செயல்பாடுகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் விஜய். இன்னும் சில தினங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் விஜய். இந்த நிலையில் விஜய்யை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகரான ஒருவர் அரசியலுக்கு வருவது குறித்து பேசியுள்ளார். 

நான் அரசியலுக்கு வந்துவிட்டால்?

கன்னட சினிமாவின் டாப் நடிகராக வலம் வருபவர் கிச்சா சுதீப். விக்ரம் நடித்த “சேது” படத்தின் கன்னட ரீமேக்கான “ஹுச்சா” என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். “சேது” படத்தில் விக்ரமை எப்படி சீயான் என்று அழைப்பார்களோ அதே போல் “ஹுச்சா” படத்தில் இவரை கிச்சா என்று அழைப்பார்கள். இதன் காரணமாக இவருக்கு கிச்சா சுதீப் என்று பெயர் வந்தது. 

இவர் தமிழில் விஜய்யின் “புலி” படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய கிச்சா சுதீப், “சில நேரங்களில் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை சிலர் தூண்டுகிறார்கள்.  ஆனால் தற்போதைக்கு அரசியலுக்கு வருவதற்கான எண்ணம் இல்லை. ஆனால்  ஒரு வேளை அரசியலுக்கு வந்துவிட்டால் என்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன்” என கூறினார். 

கிச்சா சுதீப் கடந்த 2023 ஆம் ஆண்டு கர்நாடகா மாநில தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வெளிப்படையாக ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.  

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.