சந்தானம் கதாநாயகனாக நடித்த “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் நாளை (மே 16) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். நடிகர் ஆர்யா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதில் சந்தானத்துடன் கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
இதனிடையே இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “கிஸ்ஸா 47” என்ற பாடலில் உள்ள “ஸ்ரீனிவாசா கோவிந்தா” என்று தொடங்கும் வரிகள் இந்துக்களின் மனதை புண்படுத்துவது போல் அமைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பின. திருப்பதியைச் சேர்ந்த ஜனசேனா கட்சியினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு சந்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இவ்வாறு எதிர்ப்புகள் பலமாக கிளம்பியுள்ள நிலையில் “கிஸ்ஸா 47” பாடலை நீக்க முடிவு செய்துள்ளது படக்குழு. இது குறித்த அதிகாரப்பூர்வ செய்திகளே வெளிவந்துள்ளது. இனி இத்திரைப்படம் எந்த சர்ச்சைகளும் இன்றி நாளை திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
வாழ்க்கையில் பல துனபங்களை சந்தித்து மாடலிங் துறையில் ஈடுபட்டு படிப்படியாக முன்னேறியதாக பிக் பாஸ் பிரபலம் தனது கண்ணீர் கதை…
கோயில்களின் நகரம் என சிறப்பு பெற்ற காஞ்சியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் திருக்கோயிலில்…
இன்றைய காலக்கட்டங்களில் ஓரினச்சேர்க்கை என்பது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதற்கு இந்திய சட்டம் அங்கீகரிக்காவிட்டாலும், இரு பெண்கள் ஒன்றாக வாழ்வது,…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் குடும்பத்தினரை அவதூறாக பேசியதாகவும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி…
ஆதங்கத்தை கொட்டிய ரவி மோகன் நடிகர் ரவி மோகன், ஆர்த்தியிடம் இருந்து பிரிந்த செய்தியை நாம் அறிந்திருப்போம். ஆர்த்தியின் தாயார்…
கோவை வெள்ளலூரில் நடந்த கல்லூரி மாணவர் கொலையில் காதலியை தட்டி பறித்த ஆத்திரத்தில் போதை ஊசி செலுத்தி கொன்றதாக கைதானவர்கள்…
This website uses cookies.