சந்தானம் கதாநாயகனாக நடித்த “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் நாளை (மே 16) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். நடிகர் ஆர்யா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதில் சந்தானத்துடன் கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
இதனிடையே இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “கிஸ்ஸா 47” என்ற பாடலில் உள்ள “ஸ்ரீனிவாசா கோவிந்தா” என்று தொடங்கும் வரிகள் இந்துக்களின் மனதை புண்படுத்துவது போல் அமைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பின. திருப்பதியைச் சேர்ந்த ஜனசேனா கட்சியினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு சந்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இவ்வாறு எதிர்ப்புகள் பலமாக கிளம்பியுள்ள நிலையில் “கிஸ்ஸா 47” பாடலை நீக்க முடிவு செய்துள்ளது படக்குழு. இது குறித்த அதிகாரப்பூர்வ செய்திகளே வெளிவந்துள்ளது. இனி இத்திரைப்படம் எந்த சர்ச்சைகளும் இன்றி நாளை திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…
கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…
தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…
சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…
This website uses cookies.