ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த பெருமைக்குரியவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். 2014 ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் இந்தியாவின் முதல் முழுநீள மோஷன் கேப்சர் திரைப்படமாக வெளிவந்தது “கோச்சடையான்”.
இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டபோது இந்தியா முழுவதுமுள்ள ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். ஆனால் இத்திரைப்படம் வெளிவந்த பிறகு இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலருக்கும் இத்திரைப்படத்தின் அனிமேஷன் ஏற்புடையதாக இல்லை. இதனால் இத்திரைப்படம் அதிகளவு வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் “கோச்சடையான்” திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாம். அதாவது பல காட்சிகளை AI தொழில்நுட்பத்தின் மூலம் மெறுகேற்றப்பட்டு விரைவில் மறுவெளியீடு காண உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சௌதர்யா ரஜினிகாந்த் இயக்கிய இத்திரைப்படத்தின் கதையை கே.எஸ்.ரவிக்குமார் எழுதியிருந்தார். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருந்த நிலையில் சரத்குமார், ஷோபனா, ஆதி, ருக்மிணி, நாசர் போன்றோர் நடித்திருந்தனர். குறிப்பாக நாகேஷிற்கு அனிமேஷன் தொழில்நுட்பத்தின் மூலம் உயிர்கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.