திரிஷா மாதிரிதானே தவிர திரிஷா இல்ல.. பிளேட்டை மாற்றி போட்ட அரசியல்வாதி..!

தமிழக அரசியல் குழப்பங்களில் தலைமைச் செயலகத்தை விட கூவத்தூர் கோல்டன் பே நட்சத்திர விடுதிதான் ஒரு சமயத்தில் மிகவும் முக்கிய இடம் வகித்தது. சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கும் வரை அனைத்து எம்எல்ஏக்களும் விடுதியில் தான் தங்க வைக்கப்பட்டனர். அப்போது, அந்த பத்து நாட்களில் விடுதிக்குள் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவ்வளவு ஏன் அந்த விடுதியை சுற்றி இருந்த கிராம மக்கள் கூட அவர்களது வீடுகளுக்கு செல்ல கெடுபிடிகள் பின்பற்றப்பட்டன. ஒரு சமயம் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களும் அப்போது தாக்கப்பட்டனர். முன்னதாக சசிகலா மட்டும் அடிக்கடி கூவத்தூர் விடுதிக்கு சென்று எம்எல்ஏக்கலை சந்தித்து பேசியும் வந்தார்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏ வி ராஜு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான புகார்களை முன்வைத்து வருகிறார். அவர் பேசியுள்ள விஷயங்கள் இணையதளத்தில் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

அதிலும், தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷாவின் பெயரை கூறி கூவத்தூர் ரிசாட்டில் என்ன நடந்தது என்பது பற்றி அவர் பேசிய விஷயம் மிகப் பெரிய பிரளயத்தையே அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி கோலிவுட்டிலும் ஏற்படுத்தி இருக்கிறது.

கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை கூறி நீ கூவத்தூரில் என்ன கூத்து அடித்தாய் எம்எல்ஏ வெங்கடாசலம் என்ன கூத்து அடித்தார் என்ன செய்தார் அங்கே நடிகைகளுடன் என்ன செய்தார் என்பது எனக்குத் தெரியும். நடிகை திரிஷா தான் வேண்டும் என்று வெங்கடாசலம் அடம்பிடித்தார் என்றும், கர்ணாஸ் தான் அங்கே நடிகைகளை வரவழைக்க ஏற்பாடு செய்தார் என்றும், த்ரிஷாவுக்கு ஒரு நாளைக்கு 25 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும், ஏவி ராஜு தெரிவித்துள்ளார்.

வெங்கடாசலம் குடிக்க மாட்டார். ஆனால், பெண்கள் விஷயத்தில் அவர் வீக் என்பதால் அதற்காக நடிகைகளை ஏற்பாடு செய்து பல நடிகைகள் அங்கே வந்தார்கள். சின்ன வயதான திரிஷா தான் வேண்டும் என்று வெங்கடாசலம் அப்போது அடம் பிடித்தார். இதற்கு ஆதாரத்தை நான் காட்ட முடியாது. இதெல்லாம் நடந்தது இதற்கெல்லாம் ஏற்பாடு செய்ததை அவர் தான் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை கூறி பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சி உண்டாக்கியுள்ளது.

ஏவி ராஜூ அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது, விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது திரிஷாவுக்கு ஆதரவாக பல பேர் இறங்கி உள்ளனர்.

இப்படியாக பரபரப்பு கிளப்பிய இந்த விஷயத்தில் திரிஷா தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அதையடுத்து, தற்போது அந்த அரசியல்வாதியும் பிளேட்டை மாற்றி போட்டு மன்னிப்பும் கேட்டுவிட்டார். நான் கூறியதை மீடியாக்கள் திரித்து போட்டு விட்டனர். வெங்கடாச்சலம் திரிஷா மாதிரி தான் சொன்னார். த்ரிஷாவை சொல்லவில்லை என அந்தர்பல்டி அடித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் திரைத்துறையினர் அனைவரிடத்தும் மன்னிப்பு கேட்பதாகும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், திரிஷா விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையானதால், இவர் அப்படியே மாத்தி பேசியிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இருப்பினும், நடிகைகளை கிள்ளுக்கீரைகள் போல் நினைத்து இப்படி அவதூறாக பேசுபவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். திரிஷா இந்த விவகாரம் குறித்து பின்வாங்காமல் சட்டரீதியாக கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்துக்களும் வலுவாக இப்போது, இணையதளத்தில் பேசப்பட்டு வருகிறது.

Poorni

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

12 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

12 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

12 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

13 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

14 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

15 hours ago

This website uses cookies.