பிளாட்பாரத்தில் வசிக்கும் கல்லூரி மாணவி – KPY பாலாவின் தரமான செயல்!

திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களைத் தூக்கி விட்டு அழகு பார்ப்பதில் விஜய் தொலைக்காட்சி எப்போதுமே மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வெற்றி பெற்றவர்தான் KPY பாலா.

அந்த நிகழ்ச்சியில் இவருக்கு மிகப்பெரிய அடையாளமும் ஏற்பட்டது. மேலும் இவர் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருந்தார். இதனிடையே திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க ஜூங்கா,. தும்பா , புலிகுத்தி பாண்டி ,லாபம் , நட்பு , நாய் சேகர், ஆரம்பம், ரன் பேபி ரன். உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றிருக்கிறார்.

இதனிடையே கே பி ஒய் பாலா, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்வது, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான இருசக்கர வாகனத்தை சர்ப்ரைஸ் ஆக கொடுப்பது, மற்றும் மலைவாழ் மக்களுக்கு அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்தது இப்படி பல உதவிகளை செய்து மக்களின் மனம் கவர்ந்த நட்சத்திரமாக பார்க்கப்பட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது KPY பாலா செய்துள்ள ஒரு சம்பவம் தான் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அதாவது, கல்லூரி மாணவி ஒருவர் தனது தாயாருடன் பிளாட்பாரத்தில் தங்கி படித்துக் கொண்டிருக்கும் நிலையில் கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த KPY பாலா அந்த கல்லூரி மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவர் தங்கி இருந்த பிளாட்பார்ம் இருப்பிடத்திற்கு நேரில் சென்று கல்லூரி கட்டணத்தை செலுத்த வேண்டிய மொத்த பணத்தையும் கையில் கொடுத்து விட்டு வந்திருக்கிறார். அவரின் இந்த உயர்ந்த மனதை பலரும் பாராட்டி தள்ளியிருக்கிறார்கள்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.