சந்தானம், சிவகார்த்திகேயன், கவின், ரியோ ஆகியோரின் வரிசையை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்குள் ஹீரோவாக தற்போது நுழைந்திருப்பவர்தான் KPY பாலா. “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பரவலாக அறியப்பட்ட பாலா, அதன் பின் “குக்கு வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் மிகப்பிரபலமாக ஆனார். இவரது டைமிங் மற்றும் ரைமிங் வசனங்களுக்காகவே பல ரசிகர்கள் உள்ளார்கள்.
அந்த வகையில் தற்போது KPY பாலா “காந்தி கண்ணாடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் பாலாவுக்கு ஜோடியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பாலாஜி சக்திவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் “காந்தி கண்ணாடி” திரைப்படத்திற்காக அட்வான்ஸ் மட்டுமே பெற்று நடித்தாராம் பாலா. தயாரிப்பாளர் பாலாவுக்கு இன்னும் சம்பளம் கொடுக்கவே இல்லையாம். இவரும் கேட்கவே இல்லையாம். படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த பிறகு தயாரிப்பாளர் தனக்கு நிச்சயம் சம்பளம் தருவார் என்று நம்பிக்கையில் இருக்கிறாராம் பாலா. இச்செய்தி இணையத்தில் வைரல் ஆன நிலையில் “இவ்வளவு நல்லவரா இருக்காரே இவரு” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் பாலா ஏற்கனவே பல சமூக சேவைகள் செய்து வருவது இதில் குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.