தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பாவா லக்ஷ்மணன். இவர் தமிழ் சினிமா மட்டும் இன்றி பிற மொழி திரைப்படங்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வடிவேலு உடன் பல படங்களில் காமெடியனாக நடித்து வந்தவர். ஆனால், சில ஆண்டுகளாகவே இவர் படங்களில் பெரிதாக நடிப்பதில்லை.
மிகவும் வறுமையில் இருக்கும் இவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு மயில்சாமி, விவேக், சிங்கமுத்து, மனோ பாலா போன்ற நடிகர்கள் செய்து வந்த உதவியால் இத்தனை உயிர் பிழைத்து வந்தேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வந்த இவருக்கு கால் கட்டை விரல் அகற்றப்பட்டு இருக்கிறது.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய் டிவி KPY பாலா மருத்துவமனையில் இருக்கும் பாவா லக்ஷ்மனை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மேலும் அவர் கையில் 30 ஆயிரம் ருபாய் பணம் கொடுத்து உதவி செய்திருக்கிறார்.
‘உங்களுக்கு ஒரு லட்சம் கொடுக்கலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் என் அக்கவுன்ட்டில் 32 ஆயிரம் ரூபாய் தான் இருந்தது. அதனால் தான் இதை கொடுத்தேன். தப்பா நெனச்சிக்காதீங்க’ என பாலா பாவா லக்ஷ்மணனிடம் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.