விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 28ம் தேதி ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை பார்ப்பதற்காக நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை அண்ணாசலை தேவி திரையரங்கிற்கு வந்திருந்தார். அவர்களுடன் திரையரங்கிற்கு விசிட் அடித்த விஜய்சேதுபதியும் ரசிகர்களுடன் அமர்ந்து கொஞ்ச நேரம் படத்தை பார்த்து மகிழ்ந்தார். திரையரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
நயன்தாரா திரையரங்கிற்கு வந்ததை அறிந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கு வாசலில் குவிந்தனர், நயன்தாராவின் காருக்கு மலர் தூவி வரவேற்பளித்த ரசிகர்கள் நயன்தாராவை அருகில் சென்று பார்க்கவும் அவருடன் செல்பி எடுக்கவும் முண்டியடித்ததால் திரையரங்கு வளாகத்தில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்ட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.