அர்ஜூனுடன் நெருக்கமான உறவில் இருந்த குஷ்பு… வாழ்க்கை கொடுத்ததே அவங்க தானாம்!

தமிழ் சினிமாவில் நடிகை, படத்தயாரிப்பு, அரசியல் என்று அனைத்துத் துறைகளிலும் தன் முத்திரையை பதித்து வருபவர் நடிகை குஷ்பூ. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அவருக்கு கோவில் கட்டும் அளவுக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். மேலும் ரஜினி, கமல், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிரபுவுடன் சின்னத்தம்பி, ரஜினியுடன் அண்ணாமலை போன்ற திரைப்படங்கள் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. 1995ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ஜெயராமன், குஷ்பு, கவுண்டமணி, மனோரமா உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் முறைமாமன். இந்த படத்திற்கு பிறகு தான் சுந்தர்.சி-க்கும் குஷ்புவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 5 வருடங்கள் இருவரும் காதலித்த நிலையில் பெரியோர்களின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு பெண் குழுந்தைகள் உள்ளனர். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட முன்னனி ஹீரோக்களுடன் இணைந்து ஏகப்பட்ட கமெர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

குஷ்பு நடிகர் பிரபுவை உருகி உருகி காதலித்து வந்தது ஊரறிந்த விஷயம் தான். ஆனால் சிவாஜியின் எதிர்ப்பால் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் குஷ்பு குறித்த ஒரு தகவல் கிடைத்துள்ளது. குஷ்புவும் நடிகர் அர்ஜூனுடன் நண்பர்கள் முறையில் நெருக்கமாக பழகிவந்தார்களாம். அதாவது, குஷ்பு முதன்முதலில் நடித்தது அர்ஜுன் உடன் தான் என்பதால் அவர் மீது ஒரு செண்டிமெண்ட் உள்ளதாம்.

அப்படித்தான் ஒரு கட்டத்தில் அர்ஜுன் சினிமாவில் தொடர் தோல்விகளை சந்தித்த நேரம் அது அப்போது என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு படத்தை இயக்க முடிவு செய்தாராம். ஆனால், அப்படத்தை தயாரிக்க யாருக்கும் முன் வரவில்லையாம். ஒருவர் நேரடியாகவே உங்கள் மார்க்கெட் சரிந்துவிட்டது. எனவே இந்த சமயத்தில் உங்களின் படத்தை தயாரிப்பது என்பது கொஞ்சம் யோசிக்கவேண்டி இருக்கு.

ஒரு யோசனை சொல்கிறேன். உங்களின் தோழி குஷ்பு தற்போது சினிமாவில் கொடிகட்டி பறந்துக்கொண்டிருக்கிறார். அவரை ஹீரோயினாக போட்டு அவருடன் நடித்தால் படம் ஓடும். எனவே நீங்கள் குஷ்புவின் கால்ஷீட் வாங்கிக்கொடுத்தால் நான் படத்தை தயாரிக்க ரெடி என்றாராம். அர்ஜுனும் தயக்கத்துடன் சென்று குஷ்புவிடம் கேட்க குஷ்பு அர்ஜுன் உடனான நட்பால் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். அப்படி அர்ஜுன் இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் தான் சேவகன். அந்த திரைப்படத்திற்கு பின்னர் அர்ஜுனின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக உச்சத்தை தொட ஆரம்பித்ததாம். எனவே பாதாளத்தில் சறுக்கி விழுந்த அர்ஜுனின் திரை வாழ்க்கையை மீட்டு கொடுத்ததே குஷ்பு தானாம்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.