அர்ஜூனுடன் நெருக்கமான உறவில் இருந்த குஷ்பு… வாழ்க்கை கொடுத்ததே அவங்க தானாம்!

தமிழ் சினிமாவில் நடிகை, படத்தயாரிப்பு, அரசியல் என்று அனைத்துத் துறைகளிலும் தன் முத்திரையை பதித்து வருபவர் நடிகை குஷ்பூ. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அவருக்கு கோவில் கட்டும் அளவுக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். மேலும் ரஜினி, கமல், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிரபுவுடன் சின்னத்தம்பி, ரஜினியுடன் அண்ணாமலை போன்ற திரைப்படங்கள் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. 1995ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ஜெயராமன், குஷ்பு, கவுண்டமணி, மனோரமா உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் முறைமாமன். இந்த படத்திற்கு பிறகு தான் சுந்தர்.சி-க்கும் குஷ்புவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 5 வருடங்கள் இருவரும் காதலித்த நிலையில் பெரியோர்களின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு பெண் குழுந்தைகள் உள்ளனர். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட முன்னனி ஹீரோக்களுடன் இணைந்து ஏகப்பட்ட கமெர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

குஷ்பு நடிகர் பிரபுவை உருகி உருகி காதலித்து வந்தது ஊரறிந்த விஷயம் தான். ஆனால் சிவாஜியின் எதிர்ப்பால் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் குஷ்பு குறித்த ஒரு தகவல் கிடைத்துள்ளது. குஷ்புவும் நடிகர் அர்ஜூனுடன் நண்பர்கள் முறையில் நெருக்கமாக பழகிவந்தார்களாம். அதாவது, குஷ்பு முதன்முதலில் நடித்தது அர்ஜுன் உடன் தான் என்பதால் அவர் மீது ஒரு செண்டிமெண்ட் உள்ளதாம்.

அப்படித்தான் ஒரு கட்டத்தில் அர்ஜுன் சினிமாவில் தொடர் தோல்விகளை சந்தித்த நேரம் அது அப்போது என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு படத்தை இயக்க முடிவு செய்தாராம். ஆனால், அப்படத்தை தயாரிக்க யாருக்கும் முன் வரவில்லையாம். ஒருவர் நேரடியாகவே உங்கள் மார்க்கெட் சரிந்துவிட்டது. எனவே இந்த சமயத்தில் உங்களின் படத்தை தயாரிப்பது என்பது கொஞ்சம் யோசிக்கவேண்டி இருக்கு.

ஒரு யோசனை சொல்கிறேன். உங்களின் தோழி குஷ்பு தற்போது சினிமாவில் கொடிகட்டி பறந்துக்கொண்டிருக்கிறார். அவரை ஹீரோயினாக போட்டு அவருடன் நடித்தால் படம் ஓடும். எனவே நீங்கள் குஷ்புவின் கால்ஷீட் வாங்கிக்கொடுத்தால் நான் படத்தை தயாரிக்க ரெடி என்றாராம். அர்ஜுனும் தயக்கத்துடன் சென்று குஷ்புவிடம் கேட்க குஷ்பு அர்ஜுன் உடனான நட்பால் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். அப்படி அர்ஜுன் இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் தான் சேவகன். அந்த திரைப்படத்திற்கு பின்னர் அர்ஜுனின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக உச்சத்தை தொட ஆரம்பித்ததாம். எனவே பாதாளத்தில் சறுக்கி விழுந்த அர்ஜுனின் திரை வாழ்க்கையை மீட்டு கொடுத்ததே குஷ்பு தானாம்.

UpdateNews360 Rajesh

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

14 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

15 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

15 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

16 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

16 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

17 hours ago

This website uses cookies.