குஷ்பு மகன் திடீர் மரணம்… மனவேதனையுடன் இரங்கல் தெரிவிக்கும் திரை பிரபலங்கள்!

தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.

இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி தற்போது அரண்மனை திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது திடீரென குஷ்பு வீட்டில் எதிர்பாராத மரணம் ஒன்று நேர்ந்துள்ளது.

ஆம், குஷ்பு வீட்டின் மனுஷ பிறவியில் பிறக்காத மகனை போன்று ஒரு pet dog வளர்த்து வந்துள்ளனர். அந்த செல்ல நாயின் பெயர் கூட ஸ்னூபி சுந்தர் என மகனை போன்றே பெயர் வைத்து பாசத்துடன் வளர்த்துள்ளனர். இந்நிலையில் திடீரென அது மரணித்துள்ளதை குஷ்பு மற்றும் அவரது குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

இது குறித்து பதிவிட்டுள்ள குஷ்பு, “நீங்கள் கிட்டத்தட்ட 12 வருடங்கள் எங்களில் ஒருவராக இருந்தீர்கள். நீங்கள் ஒரு கூச்ச சுபாவமுள்ள குழந்தையாக வந்தீர்கள், ஆனால் எங்கள் இதயத் துடிப்பாகிவிட்டீர்கள். உங்கள் புரிதல், நிபந்தனையற்ற அன்பு, உங்கள் புன்னகை, சில சமயங்களில் கோபம், பாதுகாக்கும் இயல்பு மற்றும் மிகவும் கீழ்ப்படிந்த இயல்பு ஆகியவை இதயத்தை உருகச் செய்தன. நீங்கள் எங்களை மனவேதனைக்குள்ளாக்கி விட்டீர்கள். நீங்கள் இறுதியாக நிம்மதியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஸ்னூபியை நாங்கள் மிஸ் செய்வோம். உன்னை போல் யாரும் இருக்க முடியாது. லவ் யூ பட்டு. கடவுளே தயவு செய்து அவரைக் கவனித்துக் கொள்ளுங்கள் என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். இதற்கு பல பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Ramya Shree

Recent Posts

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

34 minutes ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

55 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

1 hour ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

1 hour ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

2 hours ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

2 hours ago

This website uses cookies.