சொர்க்கத்தில் சந்திக்கிறோம்.. மறைந்த நடிகர் சேதுராமன் மனைவி உருக்கம்..!

தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ஒரு மருத்துவர் தான் சேதுராமன்.

இப்படத்திற்கு பிறகு வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களிலும் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இவர் சரும நிபுணர் எனப்படும் Dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார்.

சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனையையும் 2016ம் ஆண்டு திறந்தார். இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார், அவரின் இறப்பு எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

சேதுராமன் இறப்பின் போது இரண்டாவதாக கர்ப்பமாக இருந்த அவரது மனைவி அந்த நேரத்தில் 5 மாதமாம். சேதுராமன் இறப்பிற்கு பிறகு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைகள் மற்றும் மருத்துவமனையை அவரது மனைவி உமா தான் பார்த்துக்கொண்டு வருகிறார்.

அவர் மறைந்த நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சேதுவின் பழைய வீடியோக்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை உமா பகிர்ந்து உள்ளார். அதில், 1461 நாட்கள் 4 வருடங்கள் ஆகிவிட்டது. உடலளவில், நீங்கள் பிரிந்தாலும் உங்களது நினைவுகள் வலுவாக எங்களை வழி நடத்துகிறது.

வாழ்க்கை குறுகியது என்பதை ஏற்றுக் கொள்வது எளிதல்ல, எங்களுடைய கடினமான சமயத்தில், ஏதோ ஒரு வகையில் எங்களுக்கு வழிகாட்டி இருக்கிறீர்கள். மார்ச் 25 2020 அன்று கோவிட் லாக்டவுனுடன் வாழ்க்கை முடிந்து விட்டதாக நினைத்து பலர் உயிரை மாய்த்துக் கொள்கின்றார்கள். எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இருக்கிறது. ஏன் குடும்பத்தை தனியாக விட நினைக்கிறீர்கள் என்று நீங்கள் சொல்லி மக்களுக்கு நேர்மறை எண்ணங்களை வழங்கும் பல பதிவுகளை வெளியிட்டீர்கள்.

எங்களின் கடினமான நேரங்களில் இதையெல்லாம் நான் நினைத்துக் கொள்வேன். அப்பா எப்போது வருவார். அவரை நாம் சர்ப்ரைஸ் செய்யலாம் என சஹானா கேட்டுக் கொண்டே இருக்கிறார். அவளுக்கு அப்பா வரமாட்டார் என்பது தெரியாது. அவளும் நானும் நிச்சயமாக ஒரு நாள் உங்களை சொர்க்கத்தின் சந்திக்கிறோம். அதுவரை எங்களை வழிநடத்திக் கொண்டே இருங்கள் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இது குறித்த பதிவு தற்போது இணையதளத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.